districts

img

பல வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லை திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை

அவிநாசி, மே 24 – திருமுருகன்பூண்டி நகராட்சியில்  பல நாட் களாக குடிநீர் விநியோகம்  செய்யப்படாத தால் புதனன்று பொதுமக்கள் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட துரைசாமி நகர், விநாயகா கார்டன், தன்வர் ஷினி நகர், முல்லை நகர், மகாலட்சுமி கார் டன், எம்ஜிஆர் நகர், என்எஸ்பி நகர், ஏவிபி  லட்சுமி அம்மாள் லேஅவுட் உள்ளிட்ட 4,5,8,9  ஆகிய வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆறு மாதமாக, 20 அல்லது 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடி நீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிடைந்து வருகின்றனர். வேறு வழியில்லாமல் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள் ளப்பட்டுள்ளனர். 25 நாட்களுக்கு மேலாக தண்ணீர் விநியோ கம் செய்யப்படாததால், பொதுமக்கள் நக ராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ், நகர்மன்ற தலைவர் குமார் ஆகி யோர் மூன்று தினங்களுக்குள் தண்ணீர் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து, மக்கள்  கலைந்து சென்றனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,  வராத தண்ணீருக்கு வரி செலுத்துமாறு கேட் கிறார்கள். மூன்று நாட்களில் குடிநீர் பிரச்ச னைக்குத் தீர்வு ஏற்படாவிட்டால் சாலை மறி யல் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.