உடுமலை, ஜூலை 2- விருகல்பட்டி ஊராட்சியில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பொதுமக்கள் முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். குடிமங்கலம் ஒன்றியம் விருகல் பட்டி ஊராட்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதங் களுக்கு மேலாக குடிநீர் வழங்க வில்லை. மேலும், ஊராட்சியில் இருக் கும் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் வழங்கவும் நடவடிக்கை எடுக் கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகு றித்து பல முறை ஊராட்சி அதிகாரிக ளுக்கு தெரியபடுத்தியும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இதைய டுத்து, விருகல்பட்டி ஊராட்சி நிர்வா கத்தை கண்டித்து பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தை முற்றுகையிட்டு செவ்வா யன்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நடைபெற்ற பேச்சு வார்த்தையில், விருகல்பட்டியில் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகள் உடன டியாக சரி செய்யப்படும். கூட்டுகுடி நீர் திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு வழங்க வேண்டிய குடிநீர் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார் கள். முறையாக குடிநீர் கிடைக்கும் என பொது மக்களிடம் அதிகாரிகள் கூறிய தையடுத்து போராட்டம் முடிவுக்கு வந் தது.