districts

img

பல்லடம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

திருப்பூர், நவ.2- பல்லடம் தொகுதிக்குட்பட்ட ஏழு ஊராட்சிகளில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப் பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காண, சம்பந்தப் பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நவம்பர் 5 ஆம் தேதி கோவையில் நேரில் சந்தித்துப் பேசுவ தற்கு கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் ஏற்பாடு செய்தார். பல்லடம் சட்டமன்ற தொகுதியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் புதன்கிழமை காலை பருவாய் ஊராட்சி யில் துவங்கி மக்கள் சந்திப்பு பயணம் மற்றும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இல வச வீட்டு மனை பட்டா கேட்டு நூற்றுக் கணக்கானோர் மனு கொடுத்தனர். மேலும், பல்லடத்தின் மேற்கு பகுதியில் இருக்கிற 7 ஊராட்சிகளில் கடுமையான குடி நீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த ஊராட்சிகளில் 2001 ஆம் ஆண்டு மக்கள்  தொகை அடிப்படையிலேயே இதுநாள் வரை  அத்திக்கடவு குடிநீர் பிரித்து அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வழங்காததால் மக்கள் பெரும்  சிரமத்துக்கு உள்ளாகின்றனர்

என்று தெரி விக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற  உறுப்பினர் சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால்  வாரிய அதிகாரிகளோடு உடனடியாக தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசி, எதிர் வரும் நவ.5 ஆம் தேதி கோவையில் ஊராட்சி மன்ற தலைவர்களோடு, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசு வதற்கு ஏற்பாடு செய்தார். மேலும், சமுதாய நலக்கூடங்கள் கட்டப் பட வேண்டும். முதியோர் ஓய்வூதிய பலன் கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எம்.பி.,யிடம் முன்வைக்கப்பட்டது. மல்லே கவுண்டம்பாளையம் ஊராட்சியில் ஒரு பய னாளிக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற் கான உத்தரவை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பல்லடம் வட்டாட்சி யர் நந்தகோபால், வட்டார வளர்ச்சி அலு வலர் ரமேஷ் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய  அதிகாரிகள் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் பங் கேற்றனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், ஒன்றிக்குழு உறுப்பினர் வை.பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.