districts

img

அதிகம் பயன்படுத்தும் அரசு பேருந்துகளை நிறுத்த வாய்ப்பில்லை

கோவை, நவ.29- பொதுமக்கள் அதிகம் பயன் படுத்தும்  அரசு பேருந்துகளை நிறுத்த வாய்ப்பில்லை என தமிழ் நாடு சட்டமன்ற பேரவையின் பொது  நிறுவனங்கள் குழு தலைவர்  எஸ்.ஆர்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை யின் பொது நிறுவனங்கள் குழு  தலைவர் எஸ்.ஆர்.ராஜா தலை மையிலான குழுவினர், ஆட்சியர்  ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில்  கோவையில் உள்ள பல்வேறு  இடங்களில் ஆய்வு மேற்கொண் டனர். அதன்படி, ஹோப் காலேஜ்  பகுதியிலுள்ள டைடல் பார்க், உடை யாம்பாளையம் பகுதியில் உள்ள அத்வைத் நூற்பாலை, உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், பொள்ளாச்சி சாலையிலுள்ள சிட்கோ, தமிழ்நாடு பஞ்சாலை கழகம், ஆகிய பகுதிகளில் ஆய்வு  மேற்கொண்டனர். மேலும், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி, காற்றாலை நிலையம், பச்சா பாளையம் சிறுவாணி சாலையில் உள்ள ஆவின், புதிய துணை மின்  நிலையம், தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தின் சுங்கம் பணி மனையிலும் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.  

இதைத்தொடர்ந்து பணிமனை யில் பேருந்துகள் தூய்மை செய் யப்படுவதை பார்வையிட்டனர். பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சுத்தமாக செல் கிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் சட்டமன்ற பேர வையின் பொது நிறுவனங்கள் குழு வின் தலைவர் எஸ்.ஆர்.ராஜா  செய்தியாளர்களிடம் கூறுகையில்,  சுங்கம் பணிமனைக்கு 72 வாக னங்கள் வந்து செல்கின்றன. இங்கு  வரும் வாகனங்களுக்கு தேவை யான சர்வீஸ் எக்யூப்மென்ட் உள்ளதா? என்று பார்த்து, தேவை  இருந்தால் அதற்குண்டான வசதிகளை ஏற்படுத்தித் தரு கிறோம். கோவை மாநகரில் உள்ள  7சி பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், வழித் தடத்தில் இயங்காதது தொடர் பாக ஆய்வுக்கூட்டத்தில்  ஆலோசனை மேற்கொள்ளப் படும். பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் பேருந்துகளை  நிறுத்த வாய்ப்பு இல்லை. இந்த  விவகாரத்தை போக்குவரத்துக்  கழக நிர்வாக இயக்குநர் பார் வைக்கு எடுத்துச் செல்வோம். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு இலவச  பேருந்தை நமது அரசு கொடுத் துள்ளது. அரசாங்கத்தின் நோக்கம்  அரசு பேருந்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான். சிலர் இலவச பேருந்து களில் வேண்டுமென்றே அரசு பெயரைக் கெடுக்க தவறாக சித்த ரிக்கின்றனர், என்றனர்.