திருப்பூர், நவ.21- ஆத்துப்பாளையம் – ஜெய் நகர் சாலையில் கொட்டப்பட்டு இருந்த குப்பையை அள்ள வந்த வாகனம், 10 நாட்களுக்கு மேலாக பழுதாகி நின்று கிடக்கிறது என தீக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட் டதன் எதிரொலியாக வாகனம் அப்புறப்படுத்தப் பட்டது. திருப்பூர் மாநகராட்சி, ஆத்துப்பாளையம் – ஜெய் நகர் சாலையில் சாலை முழுவதும் குப்பை கொட்டப்பட்டிருந்தது. இதனால், இச்சாலையை பயன்படுத்தி வந்த பள்ளி குழந்தைகள், தொழிலா ளர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சூழல் நிலவி வந்தது. இதையடுத்து பொதுமக்களும், இப்பகுதி வாலிபர் சங்கத்தினரும் மாநகராட்சிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இக்குப்பையை அகற்ற மாநகராட்சி சார்பில் ஜேசிபி வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், குப்பையை அகற்ற வந்த வாகனம், குப்பையை அள்ளிய வாறே பழுதாகி நின்று விட்டது. 10 நாட்களாக பழுதாகிய வாகனம் அகற்றப்படவில்லை. இது குறித்து தீக்கதிர் நாளிதழ் கடந்த புதனன்று செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் வியாழனன்று குப்பையையும், குப்பை அள்ள வந்த வாகனத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். தீக்கதிரில் செய்தி வெளியான பிறகு வாகனம் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. தீக்கதிர் நாளிதழுக்கு நன்றி என அப்ப குதி பொதுமக்கள் தெரிவித்தனர்.