districts

img

சிறுமுகையில் சாலைக்கு வந்த காட்டு யானை பட்டாசு வெடித்து விரட்டிய வனத்தறையினர்

மேட்டுபாளையம், டிச.7- சிறுமுகையில் காட்டு யானை சாலையில் உலா  வந்தது பரபரப்பை ஏற்ப டுத்தியது. இதனையடுத்து வனத்துறையினர் பட்டாசு  வெடித்து வனத்திற்குள்  விரட்டினர். கோவை மாவட்டம், சிறுமுகை லிங்கா புரம், காந்தவயல் உள்ளிட்ட கிராமங்களின் அருகே உள்ள வனப்பகுதியில் காட்டு யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், பருவ மழை காரணமாக பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 103 அடிக்கு மேல் உள்ளதால், வனப்பகுதியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளன. இதனால் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் சிறுமுகை வனப்பகுதியிலிருந்து மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்ல கிராம சாலைகளை கடந்தே சென்று வரு கின்றன.  இந்நிலையில், புதனன்று காலை சிறு முகை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியான லிங்காபுரம் - காந்தவயல் இடையே உள்ள  கிராம சாலையை காட்டு யானைகள் கடக்க  வந்து சாலையோரம் நின்று கொண்டி ருந்தன. வெகுநேரமாக அங்கேயே சாலை யின் ஓரத்தில் நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் இதுகுறித்து தகவல்  தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ  இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை யினர் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காட்டு யானைகளை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர்.