அரசு விழாவா? பாஜக விழாவா?
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “உழவர்கள் கூட்டம்” நிகழ்ச்சி யில், பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமிக்கு மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் பிரதிநிதியாக இல்லாமல் ஒரு கட்சி சார்பில் கலந்து கொண்டவருக்கு பல்கலைக்கழகம் மேடையில் இடம் கொடுத்தது முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட் டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய அமைச்சரும், மாநில அமைச்சரும் கலந்து கொண்டிருக்கின்ற விழா வின் மேடையில், எந்த அரசுப்பொறுப்பிலும் இல்லாத கோவை மாவட்ட பாஜக தலை வர் உத்தம ராமசாமி அமர்ந்துள்ளார். இதை அரசு விதிகள், பல்கலைக்கழக விதிகள் அனுமதிக்கின்றதா? அரசு விழாவில் ஒரு அரசியல் கட்சியின் விழாவாக மாற்றிய பல் கலைக்கழக நிர்வாகத்தை கண்டிக்கிறோம். இந்த போக்கை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அரசு விழாவின் மேடையில் பாஜக தலைவரை அனுமதித்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேச்சு
கோவை, அக்.14- தென்னை வாரியம் ஒன்றிய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ளதால், தென்னை விவ சாயிகளுக்கு மாநில அரசால் அதிக உதவி செய்ய முடியவில்லை என்று கோவையில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழ கத்தில் வெள்ளியன்று “உழவர்கள் கூட்டம்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயி கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், தென்னை வாரியம் ஒன்றிய அரசின் நேரடி கண்காணிப் பில் உள்ளது.
இதனால் தென்னை விவசாயி களுக்கு மாநில அரசால் அதிக உதவி செய்ய முடியவில்லை. தமிழகத்தில் 41 இடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கென தனி பட்ஜெடை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. விவசாயத்தின் மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வரு கின்றது. தென்னை விவசாயிகள் பயன் பெறும் வகையில் வருங்கால பட்ஜெட் இருக் கும். 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை இது வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தால், இன் னும் அதிகமாக கொள்முதல் செய்ய தயாராக இருக்கின்றோம். ஆண்டு முழுவதிலும் கொப் பரை தேங்காய் கொள்முதல் செய்ய தயாராக இருக்கின்றோம். தென்னை வாரியம் ஒன்றிய அரசிடம் இருப்பதால், கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய்யை ரேசன் கடைகளில் விநியோகம் செய்வது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சரிடம் பேசி அதற்கு சாத்தியம் இருக்கின்றதா? என பார்க்க வேண்டும், என் றார். இதைத்தொடர்ந்து ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசு கையில், விவசாயம் நமது நாட்டின் முது கெலும்பு. இதை பாதுகாப்பது ஒன்றிய, மாநில அரசுகளின் பொறுப்பு. தென்னை விவ சாயம் என்பது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தேங்காய் உற் பத்தில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருக்கின் றது. இதில் தமிழகம் முக்கிய இடத்தில், குறிப் பாக கோவை முக்கிய அங்கம் வகிக்கிறது, என்றார்.