districts

காப்பி பழங்கள் பறிக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி, டிச.19- காப்பித் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட் டுள்ளதால், காப்பி பழங்களை பறிக்கும் பணி தீவிரம டைந்துள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை பகுதிகளில் தேயி லைக்கு அடுத்தபடியாக காப்பி பயிரிடப்பட்டுள்ளது. சுமார் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரி டப்பட்டுள்ளது. தற்போது காப்பித் தோட்டங்களில் ரோபஸ்டா (மர) வகை காப்பி பழங்கள் பழுத்துள்ளன. இவற்றை சாப்பிட காப்பித் தோட்டங்கள் நிறைந்த குரங் குமுடி, வறட்டுப்பாறை, சங்கிலி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள் ளது. இந்நிலையில், காப்பி பழ மகசூல் பாதிப்படைந்து வருவதாக கூறும் தோட்ட முதலாளிகள், தொடர்ந்து யானைகள் காப்பி பழ வேட்டையில் ஈடுபட உள்ள தாக தெரிவித்துள்ளது. இதனால், அவற்றை பறிக்கும்  பணியில் பணியாளர்களை அமர்த்தி, பணிகளை துரிதப் படுத்தி உள்ளனர்.ரொபஸ்டா வகை காப்பி பழங்கள் பாலிஷ், சாயம், பெயிண்ட் தயாரிக்கப்படுகிறது. எனவே, கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விலை போவ தாக விவசாயிகள் கூறுகின்றனர்.