districts

img

கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்திடுக

நாமக்கல், டிச.7- நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரி முதல்வரை இட மாற்றம் செய்யக்கோரி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்,திருச்சி சாலையில் கவிஞர்  ராமலிங்கம் அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி  உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரம் மாணவிகள் சுழற்சி  முறையில் படித்து வருகின்றனர். இக்கல்லூரி முதல்வ ராக பால்கிரேஸ் பணியாற்றி வருகிறார். சமீபத்தில்  இவர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் உயர்நீதிமன்ற  தடை ஆணை பெற்று, இதே கல்லூரியில் மீண்டும் முதல்வ ராக பொறுப்பேற்று கொண்டார். இக்கல்லுாரியில் வணிக வியல் மற்றும் பொருளாதார துறையில், 350க்கும்  மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு  துறைத்தலைவராக நல்லுசாமியும், உதவி பேராசிரியர்  ஒருவரும் மட்டுமே பணியில் உள்ளனர்.  இந்நிலையில், திங்களன்று வணிகவியல் துறை தலைவர்  பேராசிரியர் நல்லுசாமி, தனது துறையில் படிக்கும் முதுகலை  மாணவிகளுக்கு இண்டன்ஷிப் பயிற்சிக்கு கையெழுத்து வாங்க, முதல்வர் பால்கிரேஸை சந்தித்து உள்ளார். அப் போது கல்லூரி முதல்வர் மாணவிகள் முன்னிலையில், தாமதமாக வந்ததாக கூறி துறைத்தலைவர் நல்லுசாமியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும்  கையெழுத்து போட முடியாது எனக்கூறி மறுத்துவிட்டார்.  இதனால் மாலை 6 மணி வரை முதல்வர் அலுவலகம்  வெளியே துறை தலைவரும், மாணவிகளும் காத்திருந்தனர்.  மாலை 6 மணிக்கு மேல், மாணவிகளை மட்டும் உள்ளே அழைத்த முதல்வர், துறை தலைவர் நல்லுசாமிக்கு எதிராக கடிதம் எழுதி கேட்டு உள்ளார். அதற்கு மாணவிகள் முடியாது என கூறியபோது, அவர்களை மிரட்டி கடிதம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில், வணிகவியல், பொருளாதார துறை மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் தடுத்தபோது அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்ய வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மேலும் பேராசிரியர் பணி யிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த  நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் மாணவி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போராட் டத்தை கைவிட மறுத்த மாணவிகள் கல்லூரி வளாகத் திற்குள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.  இது குறித்து கல்லூரி முதல்வர் பால்கிரேஸிடம் கேட்ட போது, போராட்டத்தில் ஈடுபடும் மாணவிகளுக்கு ஏற்கனவே  விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. ஒரு சிலரின் தூண்டு தலின் பேரில், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்  என்றார்.  இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை போராட்டத்தில்  ஈடுபட்ட மாணவிகள் சிலரையும், துறைத்தலைவர் நல்லுசாமி,  பெண் அறை கண்காணிப்பாளர் ஆகியோரையும் அழைத்து  பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாணவிகள் கலைந்து  சென்றனர்.