districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

முடங்கியிருந்த குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது

உதகை, மார்ச் 12- கூடலூர் அருகே உள்ள வட்டிக்கொல்லி கிராமத்தில் 4 ஆண்டுகளாக முடங்கியிருந்த குடிநீர் திட்டம் செயல் பாட்டுக்கு வந்ததால், பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட வட்டிக்கொல்லியில் 50க்கும் மேற் பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இவர்கள் குடிநீர் வசதி இல்லாமல் கடும் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு எஸ்ஏடிபி மூலம் ரூ.17  லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கிணறு, நீர்த் தேக்க தொட்டி, பம்பு அறை கட்டும் பணி நடைபெற் றது. ஆனால், தடையில்லா சான்று கிடைக்காததால் மின் இணைப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் குடிநீர் திட்டம் முடங்கியது. இந்நிலையில், தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகத்திடம் பழங்குடியின மக்கள் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து தடையில்லா சான்று வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மின் இணைப்பும் பெறப்பட்டது. இதைய டுத்து சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் திட்டம் சனி யன்று செயல்பாட்டுக்கு வந்தது. இதனை பேரூராட்சி துணைத்தலைவர் யூனைஷ் பாபு தொடங்கி வைத் தார். இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறுகையில், எங் கள் பகுதியில் மழைக்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. கோடை காலத்தில் குடிநீர் கிடைக்காமல் வன விலங்குகள் அச்சுறுத்தல்களுக்கு இடையே தொலை தூரம் குடங்களை தூக்கிச்சென்று வெளியிடங்களில் இருந்து எடுத்து வர வேண்டிய நிலை இருந்தது. நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு தற்போது எங்கள் பகுதியில் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது மகிழ்ச் சியை அளிக்கிறது, என்றனர்.

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

உதகை, மார்ச் 12- உதகை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத 132 கடைகளுக்கு அதிகாரிகள் ஒரே  நாளில் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் மொத்தம் 1,587 கடை கள் உள்ளன. கடந்த 1.7.2016 முதல் வாடகை மறு நிர்ண யம் செய்து உயர்த்தப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தை களில் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித் தும், வியாபாரிகள் முழுமையாக செலுத்தாமல் இருந்து  வந்தனர். தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை  ரூ.40 கோடி செலுத்தாததால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 757 கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைத்த கடை வியாபாரிகளில் ஒரு  சிலர் முழு தொகையையும், ஒரு சிலர் பாதித்தொகையை யும் செலுத்தியதை தொடர்ந்து சீல்கள் அகற்றப்பட் டன. இதன்பின் வாடகை செலுத்தாமல் இருந்த கடைக ளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். அத்துடன் அவர்கள் வாடகை செலுத்த இந்த மாதம் வரை காலக்கெடுவும் வழங்கப்பட்டது. ஆனாலும் அவர் கள் வாடகையை செலுத்துவதற்கு இதுவரை முன்வர வில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நகராட்சி  ஆணையர் காந்திராஜன் உத்தரவின்பேரில், வருவாய் ஆய்வாளர் நஞ்சுண்டன் தலைமையிலான அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவ டிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, வெள்ளியன்று ஒரே நாள் இரவில் இறைச்சி, பேன்சி, மளிகை என 132 கடை கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த பணியில் சுமார் 50 நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் வியாபாரி கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் காந்திராஜன் கூறு கையில், ரூ.40 கோடி பாக்கி இருந்த நிலையில் தற்போது வரை ரூ.22 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது. ரூ.18 கோடி  பாக்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் மின்கட்டணம் மட்டும் கோடி கணக்கில் பாக்கி வைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே மீதமுள்ள நிலுவையை வசூலித் தால் தான் நகராட்சி நிர்வாக பணிகளை தொய்வின்றி செயல்படுத்த முடியும். இந்த நிதி ஆண்டு முடிவதற்குள் வாடகை வசூலிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளது, என்றார்.

வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்

இளம்பிள்ளை, மார்ச் 12- சங்ககிரியில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன் காவல் துணை கண்கா ணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து ரையாடல் நடத்தினர். சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மோரூர் பகு தியில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் வெளி மாநிலத்தொழிலாளர்கள் பங்கேற்றனர். அப் போது அவர்களிடத்தில் பேசிய அதிகாரிகள், சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல் கள் பொய்யானது அவற்றை யாரும் நம்ப வேண்டாம். பொய்யான தகவல்களை பரப் பியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழக அரசும், காவல் துறையும் வெளிமாநிலத் தொழிலாளர்க ளுக்கு வழங்கி வரும் பாதுகாப்புகள் குறித் தும் கூறினார். இதன்பின் அவர், வெளிமாநில தொழிலா ளர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் உட னடியாக சங்ககிரி டிஎஸ்பி அலுவலகத் தையோ அல்லது நகர காவல் நிலையத் தையோ அணுகினால் பாதுகாப்பு வழங்குவ தோடு, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் நம்பிக்கை  ஏற்படுத்தினார்.

மஞ்சள் ஏலம்

நாமக்கல், மார்ச் 12- நாமக்கல், திருச்செங் கோடு வேளாண்மை உற் பத்தியாளர்கள் கூட்டுறவு விற் பனை சங்கத்தின் தலைமை யகத்தில், சனியன்று மஞ்சள்  ஏலம் நடைபெற்றது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண் டால் ரூ.6,661 முதல் ரூ.7,661 வரையிலும், கிழங்கு ரக மஞ் சள் குவிண்டால் ரூ.5,759 முதல் ரூ.6,444 வரையிலும்,  பனங்காளி ரக மஞ்சள் குவிண் டால் ரூ.10,022 முதல் ரூ.11,885 வரையிலும் விற்பனையா னது. மொத்தம் 3 ஆயிரம் மூட்டை மஞ்சள் ரூ.1  கோடியே 25 லட்சத்துக்கு விற் பனையானதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்

நாமக்கல், மார்ச் 12- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திங்களன்று (இன்று) துவங்கப்படுகிறது. இதற்காக மாணாக்கர்கள் தேர்வு மையங் களுக்கு வந்து செல்வதற்காக பேருந்து வசதிகள் செய்யப் பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.10 ஆம் தேதி  தொடங்கவுள்ளது. ஏப்.11 ஆம் தேதி முதல் ஏப்.21 ஆம் தேதி  வரை உதவி விடை திருத்துநர்கள்வி டைத்தாள்களை மதிப் பீடு செய்வர். இந்த பணிகள் ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் முடி வடைகிறது. முன்னதாக, பிளஸ்டூ தேர்வு எழுதும் மாணவர்க ளுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வாழ்த்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள் ளார்.

வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் பாதிப்பு

தருமபுரி, மார்ச் 12- தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் கள் வரை வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்டம் முழுவதும் அதிக பாதிப்புள்ள ஊராட்சி கள் மற்றும் கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்த பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் துவங்கி யுள்ளது. பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதாலும் பொது மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல், இருமல், தலை வலி, உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவ சிகிச்சைக்கு அரசு மற் றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், அரூர், மொரப்பூர், தருமபுரி அதனையொட்டியுள்ள நூற்றுக் கணக்கான கிராமப்பகுதிகளில் பெருமளவு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், காய்ச்சல், சளி, இருமல் பள்ளி குழந்தைகளிடையே வேகமாக பரவி வருகிறது. அதிகளவில் மக்கள் அரசு மருத்து வமனைக்கு சென்று வருகின்றனர். அரசு மருத்துவமனைக ளில் போதிய செவிலியர்கள், மருத்துவர்கள் இல்லாததா லும் ஒரே நேரத்தில் அதிக அளவிலான புற நோயாளிகள் குவி வதாலும் மருத்துவம் பார்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் ஊசி போட்டு, மருந்து வாங்கினால் ஒரு நோயாளிக்கு குறைந்தது 500 ரூபாய் செலவாகிறது. எனவே காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டி

கோவை, மார்ச் 12- பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான சதுரங்கப்போட்டி, கோவையில் நடைபெற்றது. இதில், ஏராள மானோர் பங்கேற்று உற்சாகமாக விளை யாடினர். கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தேசிய பார்வையற்றோர் இணைய வளாகத் தில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் பங் கேற்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்க ளில் இருந்து பார்வை மாற்றுத் திறன் சதுரங்க ஆட்டக்காரர்கள் 21 பேர் பங்கேற்றனர். முன்ன தாக இந்நிகழ்ச்சியை வாழ்த்தி, மாவட்ட மாற் றுத்திறனாளிகள் நல அலுவலர், வசந்த ராம் குமார், பாரா விளையாட்டு அகாடெமி செய லாளர் டி.மோகன் குமார், ஹேண்ட்ஸ் ஆப் ஹோப் நிறுவனர் தேவ கோவிந்தராஜு, தேசி யப் பார்வையற்றோர் இணைய ஒருங்கி ணைப்பாளர் டி. சதாசிவம், தியா சோசியல் நல டிரஸ்ட் நிறுவனர் ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியவர் ஜார்கண்டில் கைது

திருப்பூர், மார்ச் 12- திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவ தாக வதந்தி பரப்பியவரை ஜார்கண்ட் மாநிலத்தில் திருப் பூர் போலீசார் கைது செய்தனர். திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்களைத் தாக்குவ தாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் சைபர் கிரைம் ஆய்வா ளர் ஐ.சொர்ணவள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. அந்த தனிப்படையினர் சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததில் முகநூலில் பிரசாந்த் குமார் என்பவர் உண்மைக்குப் புறம்பான பொய் செய்திகளை வீடியோவாக தயார் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்து  வதந்தியைப் பரப்பினார்.  இவர் மீது திருப்பூர் சைபர் காவல் நிலையத்தில் 153 ஏ,  505 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் பிரசாந்த்குமாரை கைது செய்ய திருமுருகன் பூண்டி காவல் ஆய்வாளர் ஜெகநாதன் என்பவர் தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் பக்ஹாரி சுபயன் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்கு மாரை (32) ஜார்கண்ட் மாநிலம் லேட்டஹர் மாவட்டம் ஹெகி காரா கிராமத்தில் வைத்து தனிப்படை போலீசார் அவ ரைக் கைது செய்தனர். பிரசாந்த்குமாரை லேட்டஹர் மாவட்ட  உட்கோட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி னர். நீதித்துறை நடுவரின் உத்தரவைத் தொடர்ந்து திருப்பூர் அழைத்து வரப்பட்டு திருப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 3 அவர்கள் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவ லுக்கு அனுப்பி வைத்தனர்.