ஈரோடு, மே 7- கோபி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நான்காவது நாளாக நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியம், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.பிரகாசம், போக்குவரத்து ஓய்வு பெற் றோர் நல அமைப்பினுடைய துணைத் தலைவர் எம்.கே. நடராஜன், இன்சூரன்ஸ் துறையின் ஓய்வு பெற்ற அமைப்பின் மாரிமுத்து, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செய லாளர் வி.ஆர்.மாணிக்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நெடுஞ்சாலை துறை சங்கத்தின் மாநில நிர்வாகிகளும் சிறப்புரையாற்றினர்.