மே.பாளையம், ஜன.24- மேட்டுப்பாளையம் மங்களக்கரைபுதூர் பகுதியில் உள்ள வீரசென்னியம்மன் கோவில் மேற்கூரைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்கள் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மங்களக்கரை புதூர் என்னு மிடத்தில் வீரசென்னியம்மன் கோயில் உள் ளது. கெண்டேபாளையம், மருதூர், ராமேக வுண்டன்புதூர், கீரணத்தம், புதுப்பாளையம் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஏராளமான மக்கள் இக்கோயி லுக்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இக்கோவில் முன் பகுதியில் தென்னை ஓலை யில் பந்தல் அமைத்து அதன் மேல் தகர சீட் அமைக்கப்பட்டிருந்து. இந்த நிலையில் புதனன்று காலை கோவிலின் முன்பகுதி கூரை முழுவதும் எரிந்து கொண்டிருப்பதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்த னர். இதனைத்தொடர்ந்து, காரமடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தக வலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறை அதிகாரிக ளின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, நடத்தப்பட்ட சோதனையில், பெட்ரோல் ஊற்றி கூரை எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதன்பின் தடயவியல் நிபுணர்கள் வரவைக்கப்பட்டு தீ வைத்த நபர்கள் குறித்து ஆதாரங்கள் சேகரிப்பட் டது. மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.