districts

img

உரிய பராமரிப்பின்றி கிடக்கும் கொள்ளிடம் ஆற்றுப் பாலம்

சீர்காழி, ஏப்.28- நாகை மாவட்டத்தின் எல்லையான கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குகொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. சென்னை- கன்னியாகுமரி வரைசெல்லும் வழியில் இந்த பாலத்தை கடந்து தான் அனைத்து வகை வாகனங்களும் சென்று கொண்டிருக்கின் றன. இந்த பாலம் உரிய பராமரிப்பின்றி உள்ளது. பாலத்தின் இருபுறம் உள்ள மின் கம்பங்கள் துருப்பிடித்து விழும் நிலையில் உள்ளது. மின் விளக்குகள் பொருத்தாமல் இரவு நேரங்களில் பாலம் இருண்டே கிடக்கிறது. மேலும் பாலம்ஓரப்பகுதியில் மண் மற்றும் குப்பைகள்சேர்ந்து தேங்கும் மழை நீர் வெளியேறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தை முறையாகப் பராமரிகக் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;