districts

img

வருவாய் அலுவலர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்

திருப்பூர், பிப்.22- பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து திருப்பூர், தாராபுரம், அவிநாசி  ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில்  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்  சங்கம் சார்பில் வேலை புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. துணை வட்டாட்சியர் பட்டியல் திருத் தத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள  பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணி பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். இள நிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்  பெயர் மாற்ற அரசாணையின்படி அடிப் படையில் விதித்திருந்த ஆணையினை வெளியிட வேண்டும். வருவாய் மற்றும்  பேரிடர் மேலாண்மை துறையில், மூன்று  ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியி டங்களை நிரப்ப வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங் கும் பணிக்கென, புதிய துணை வட்டாட் சியர் பணியிடங்களை உடனடியாக ஏற் படுத்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச  கோரிக்கைகள் வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார் பில் போராட்டம் நடைபெற்றது. தாராபுரத்தில் நடைபெற்ற வேலை புறக்கணிப்பு போராட்டத்திற்கு  வட்டக் கிளை செயலாளர் நந்தகுமார் தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆறு முகம், முன்னிலை வகித்தார் இதில் பலர்  பங்கேற்றனர்.