அத்திக்கடவு குடிநீரில் சாக்கடை நீர் கலப்பு அரசூர் கிராம மக்கள் அவதி!
கோவை, மே 27- அரசூர் ஊராட்சி, கொள்ளுப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவ தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள னர். கோவை மாவட்டம், அரசூர் ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இவர்களுக்கு அத்திக்கடவு குடிநீர் மற்றும் போர் வெல் குடிநீர் ஆகிய இரண்டும் கடந்த பல ஆண்டுக ளாக ஒரே குழாய் மூலமாக விநியோகிக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அத்திக்க டவு குடிநீர் கடுமையான துர்நாற்றத்துடனும், புழுக்களு டனும் விநியோகிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அசுத்தமான தண்ணீரைக் குடித்த குழந்தை கள் மற்றும் பெரியவர்கள் பலருக்கு வயிற்றுப் போக்கு, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதா பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர். இது பொதுமக்கள் கூறுகையில், அத்திக்கடவு குடி நீருக்கு தனியாக குழாய் அமைக்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. பல்வேறு இடங்களில் கழிவுநீர் வெளியேறும் ஷோக்பிட் குழிகளுக் குள்ளேயே குடிநீர் குழாய்கள் செல்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால், மாசடைந்த இந்த குடிநீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அரசூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்களை முறையாக அமைத்து, சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
போட்டித் தேர்வில் வெற்றி பெற குன்னத்தூரில் கருத்தரங்கம்
திருப்பூர், மே 27 - திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உள்ள கே.தங்கவேல் நினைவகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறுவது குறித்த கருத்தரங் கம் நடைபெற்றது. குன்னத்தூர், தோழர் கே.தங்கவேல் நினைவகத்தில் நடை பெற்ற இந்த கருத்தரங்கிற்கு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி ச.பன்னீர்செல்வம் தலைமை வகித் தார். பிஎஸ்என்எல்லில் பணி ஓய்வு பெற்ற உதவி கோட்ட அதி காரி பி.சின்னச்சாமி முன்னிலை வகித்தார். இந்த கருத்தரங் கில் போட்டித் தேர்வு பயிற்றுநர் கோவை கே.கணேஷ் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்குப் பயனுள்ள ஆலோசனை களை வழங்கினார். ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலை வர் ஆர்.குமார் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் குன்னத் தூர் யுகேஷ்வர்மன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் போட்டித் தேர்வில் பங்கேற்க உள்ள மாண வர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து சனி, ஞாயிற்று கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்து வதற்கு ஏற்பாடு செய்வதென ஆலோசிக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரிப்பு - ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கும் சிறுவர்கள்
திருப்பூர், மே 27 – திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் சூழலில் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி சிறுவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந் துள்ளது. தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள சூழலில், சிறுவாணி பகுதியில் அதிக அளவு மழைப்பொழிவு இருந்த தன் காரணமாக அங்கு உற்பத்தியாக கூடிய நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் மாநகர் வழியாக செல்லக்கூடிய நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகம் காணப்படும் சூழலில், அணைக் காடு பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் நொய்யல் ஆற்றில் இறங்கி மீன் பிடித்து வருகின்றனர். ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வரும் சமயத்தில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் ஆற்றில் இறங்கி விளையாடி வருகின்றனர். மீன் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணத்தில் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி விளையாடி வரு கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு கள் அதிகம் உள்ளது. எனவே ஆற்றில் நீர் அதிகம் செல் லும் காலங்களில் சிறுவர்கள் இறங்காமல் பார்த்துக் கொள்ள மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: தந்தை, மகன் பலி
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: தந்தை, மகன் பலி திருப்பூர், மே 27- திருப்பூர், நெருப்பெரிச்சல் பழனிசாமி நகரைச் சேர்ந்தவர் திருமலைசாமி (58), இவரின் மகன் ஜீவானந்தம் (26). இரு வரும் நெருப்பெரிச்சலில் இருந்து கூலிப்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது புதிய வாவிபாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர் களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த திருமலைசாமி, ஜீவானந்தம் ஆகிய இருவரை யும் அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த னர். அங்கு, அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் திருமலைசாமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரி வித்தனர். ஜீவானந்தத்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், சிகிச்சை பல னின்றி ஜீவானந்தம் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தரமான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வழங்க விவசாயிகள் கோரிக்கை
உடுமலை, மே 27 - உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதி யில் தரமான உரம் மற்றும் பூச்சி மருந்துகளை நியாயமான விலையில் கிடைக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளானர். கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அமராவதி, திருமூர்த்தி அணைகளுக்கு நீர்வ ரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால், ஆற்றின் கரையோரப் பகுதி விவசாயிகள் மற்றும் குளத்து பாசன விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு பயிர் செய்தும், மீதம் உள்ள நிலப்பரப்பில் மக்காச்சோ ளம் மற்றும் சிறுதானியங்கள் விவசாயம் செய்ய துவங்கி உள்ளனர். ஏற்கனவே கடந்த காலங்களில் பல தனியார் விதை கம்பெனிகள் தரம் இல்லாத விதை மற்றும் உரங்களால் போதிய விளைச்சல் இல்லா மல் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள் ளது. பயிர் காப்பீடு உள்ளிட்ட எந்த நிவார ணமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலை யில், எந்த வகையான பயிர் செய்தால் நன்றாக இருக்கும் என்று உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு தெரியப்ப டுத்த வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரம், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை தரமாகவும், நியா யமாகவும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
கல்பனா சாவ்லா விருது: விண்ணப்பிக்க அழைப்பு
கல்பனா சாவ்லா விருது: விண்ணப்பிக்க அழைப்பு திருப்பூர், மே 27 - பாராட்டத்தக்க வகை யில் வீரதீர செயல்களில் ஈடு பட்டவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு வகையில் துணிச்சலாக செயலாற்றிய தமிழக பெண் களுக்கு 2025ஆம் ஆண்டிற் கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித் தார். இது தொடர்பாக அவர் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில், 2025 ஆம் ஆண்டிற்கு கல்பனா சாவ்லா விருது, சுதந்திர தின விழாவின்போது வழங்கப்ப டும். இந்த விருதுக்கு தமிழ கத்தை சார்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதிற்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் விவ ரத்தை ஒரு பக்கம் அளவில் கருத்துருவை ஜூன் 16க்குள் (https://award.tn.gov.in) என்ற இணையதளம் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தலா மூன்று நகல்கள் மற்றும் பாஸ்போட் அளவு புகைப் படம் இரண்டுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகம், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண். 35-ல் ஜூன் 12-க்குள் சமர்ப்பிக் கும்படி ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் கேட்டுக் கொண்டுள் ளார்.
சிறுவாணி அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
சிறுவாணி அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு கோவை, மே 27- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், சிறுவாணி அணை நீர்மட்டம் 30.24 அடியாக உயர்ந்துள் ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் தொடர் மழை காரணமாக கேரளம் மாநிலத்தில் உள்ள சிறு வாணி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரு கிறது. கடந்த 5 நாட்களில் 12 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையின் அடிவாரத்தில் 86 மி.மீ. மழையும், அணை கட்டு பகுதியில் 107 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. நடப்பாண்டில் முதல்முறையாக அணையின் நீர்மட் டம் இவ்வளவு வேகமாக உயர்ந்துள்ளது. கடந்த 23 ஆம் தேதியன்று 17.91 அடியாக இருந்த நீர்மட்டம், செவ்வா யன்று (27-ஆம் தேதி) 30.24 அடியாக உயர்ந்துள்ளது. திங்களன்று மட்டும் 26.55 அடியிலிருந்து 3.69 அடி உயர்வு பதிவாகியுள்ளது. அணையின் மொத்த கொள்ள ளவு 44.61 அடியாக இருக்கும் நிலையில், மழை தொடர்ந்தால் விரைவில் அணை நிரம்பும் என எதிர் பார்க்கப்படுகிறது. சிறுவாணி அணை, கோவை மாநகராட்சியின் 22 வார்டுகள் மற்றும் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளுக்கு முக் கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. தற்போது, பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து தினமும் 63.72 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி.) நீர் திறந்துவிடப்படுகிறது. மழை தொடர்ந்து பெய்தால், அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து, கோவையின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மறு தேர்வு நடத்த மாணவர் சங்கம் எதிர்ப்பு
மறு தேர்வு நடத்த மாணவர் சங்கம் எதிர்ப்பு சேலம், மே 27- சேலம் பெரியார் பல்கலைக் கழக தேர்வாணையம் 10.05.2025 அன்று நடத்திய ஆங்கில இலக்கிய போட்டித் தேர்வினை மீண்டும் 27.05.2025 நடத்துவதாக பல்கலைக் கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ரன், மாவட்ட தலைவர் அருண் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ஆங்கில இலக்கிய போட்டி தேர்வு ஏற்கெனவே தேர்வு நடத்தி விடைத்தாள்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து விட்ட நிலையில் மீண்டும் நடத்துவதால் அரசுக் கல்லூரி மாண வர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். வெளி பல்கலை யில் முதுநிலை சேர்க்கை பாதிக்கப் படும். வினாத்தாள் கடினமாக கேட்கப்பட்டிருப்பதால் தேர்வு முடிந்து 15 நாட்கள் கழித்து தேர்வு நடத்துவது அனுமதிக்க முடியா தது. வினாத்தாள் பாடப்பகுதிக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டிருந்தால் கருணை மதிப்பெண் தான் வழங்க முடியுமே தவிர மீண்டும் மறு தேர்வு நடத்துவது என்பது எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் நடைமுறையில் இல்லை. இப்போது பெரியார் பல்கலைக்கழகம் தேர் வாணையம் மறு தேர்வு நடத்துவது என்பது பொருத்த மாக இருக்காது. எனவே இந்த குளறுபடிக்கு காரண மான பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மறுத்தேர்வுக்கு பதிலாக மாண வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டு மென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள் ளது.
விஷவாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
திருப்பூர், மே 27 - திருப்பூர் அருகே தனியார் சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு, உபகர ணங்கள் இல்லாமல் சுத்திகரிப்புப் பணி யில் ஈடுபட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசா ரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு தலை மைச் செயலாளர், காவல் துறை தலை வர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் செவ்வாயன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத் தில் கடந்த மே 19ஆம் தேதி சாய ஆலையில் விஷ வாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் ஆபத் தான நிலையில் சிகிச்சை பெற்று வரு வது பற்றி ஊடகங்களில் வந்த செய்தியை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசார ணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இச்சம்பவம் உண்மையாக இருக்கு மானால், இதில் மனித உரிமை மீறப் பட்டுள்ளது கடுமையான பிரச்சனை யாகும். உச்சநீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், உள்ளாட்சி நிர்வா கங்களும், இதில் தொடர்புடைய முக மைகளும் கழிவுகளை சுத்தப்படுத்து வதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளது. இது போன்ற ஆபத் தான கழிவுகளை சுத்தப்படுத்தும் விச யத்தில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடு கள், உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும். பொருத்தமான ரோபாடிக் இயந்திரங்களை பயன்படுத்த வேண் டும் என மனித உரிமை ஆணையம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி ஒன்றிய அரசு, மாநில அரசு கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மனித உரிமை ஆணையம் வழங்கிய அறிவுறுத்தலில், ஆபத்தான கழிவு களை சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்தும் நடைமுறையை முழு மையாக கைவிட வேண்டும் என கூறி யுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், மாநில காவல் துறைத் தலைவர் ஆகியோ ருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பூரில் மூவர் விஷவாயு தாக் கிய சம்பவத்தில் நான்கு வார காலத்திற் குள் விரிவான அறிக்கை கொடுக்கு மாறு மனித உரிமை ஆணையம் கேட் டுக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சம்பவம் குறித்து தற்போது வழக்கு விசாரணையின் நிலை, இழப்பீடு கொடுத்திருப்பது பற்றிய விபரம் ஆகி யவற்றை உள்ளடக்கி இந்த அறிக்கை கொடுக்க வேண்டும்.
கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கிடுக
கோவை, மே 27- பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை ஊழியர்க ளுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங் கிட கோரி பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உதவியாளர் நேரடி நியமனம் 50% தேர்வாணையம் மூலம் நியமனம் செய்வதை ரத்து செய்து 2017 முதல் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறைகளில் காலி யாக உள்ள 450க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியி டங்களை பதவி உயர்வின் மூலம் உடனே நிரப்பிட வேண்டும். தமிழக அரசில் பணிபுரியும் பல்வேறு துறை ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ளது போல் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை ஊழியர்களுக்கும் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணி யாளர் சங்கத்தினர் திங்களன்று கோவை, டவுன்ஹால் அருகே உள்ள பொதுப்பணித்துறை மண்டல அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.வேலுமணி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு மாவட்டச் செயலாளர் கருப்பசாமி, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் அருண கிரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளாக கலந்து கொண்டனர்.