கோவை,பிப். 29- வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் ஆறு ரயில்களை கோவை வழியாக இயக்க வலியு றுத்தி அனைத்து கட்சி சார்பில் தொடர் போராட்டங்களை முன்னெ டுக்க உள்ளதாக அனைத்து கட்சி கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 6 ரயில்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வராமல் இரு கூர், போத்தனூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் என தென்னக ரயில்வே சார்பில் அறிவித் துள்ளது. இதற்கு கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட் டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். வட மாநிலங்க ளில் இருந்து இயக்கப்படும் ஆறு ரயில்களை கோவை வழியாக இயக்க வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டமைப்பு தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தி ருந்தனர். இதன் முதற்கட்டமாக வெள்ளி யன்று ரயில் பயணிகளிடம், கோவையை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் ரயில்வே துறை என்கிற தலைப்பிட்ட பிரசுரங்களை வழங்கி னர். முன்னதாக, வருகிற 7 ஆம் தேதி யன்று மாட்டு வண்டியில் சென்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்த உள்ளதையும் மக்களிடையே தெரி வித்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழ கம் பொதுச்செயலாளர் கு.இராம கிருட்டிணன் தலைமையில் ஏராள மானோர் பங்கேற்றனர்.