districts

சட்டம் – ஒழுங்கு பிரச்சனையற்ற ஆண்டாக முடிவுற்ற நீலகிரி

உதகை, ஜன.1- நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏதுமற்ற ஆண்டாக முடிவுற்றது என்று மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை  சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது, 2022 ஆம் ஆண்டில்‌ 123 குற்ற வழக்குகள்‌ பதிவு செய்யப்பட்டு, அதில்‌ 61 சதவிகித வழக்குகள்‌ கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள்‌ கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்‌. விநா யகர் சதுர்த்தி ஊர்வலத்தின்‌போது எவ்வித சட்டம் ‌- ஒழுங்கு பிரச்சனையுமின்றி அமைதி யான முறையில்‌ முடிவுற்றது. குழந்தைக ளுக்கு எதிரான பாலியல்‌ குற்றம் தொடர் பாக, 2022 ஆம்‌ ஆண்டு 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதி ரான பாலியல்‌ குற்றங்களை குறைக்கும்‌ நட வடிக்கையில்‌, அனைத்து மகளிர்‌ காவல்‌ நிலைய காவல்‌ ஆய்வாளர்கள்‌ பழங்குடியின மக்களிடையேயும், பள்ளி, கல்லூரிகளில்‌ மாணவ, மாணவிகளிடத்திலும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். இதுதொடர்பாக, 2020 ஆம் ஆண்டு 783, 2021 ஆம் ஆண்டு 68, 2022 ஆம்‌ ஆண்டு 1046 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடத்தப் பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும்‌, 2022 ஆம் ‌ஆண்டில்‌ குழந்தை களுக்கு எதிரான பாலியல்‌ குற்ற வழக்குகள்‌ சிறிதளவு குறைந்துள்ளது. 2022 ஆம்‌ ஆண்டு  பாலியல்‌ குற்ற வழக்குகளின்‌ புலன்‌ விசா ரணை அதிகாரிகள்‌ துரிதமான நடவடிக்கை எடுத்து, குற்றப்பத்திரிகை தாக்கல்‌ செய்து  வழக்குகளை கோப்புக்கு எடுத்து, 15 பாலி யல்‌ குற்ற வழக்குகளுக்கு நீதிமன்றத்தில்‌  தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.  2020 ஆம்‌ ஆண்டு 7 கொலை வழக்குகளில்‌ 17 குற்ற வாளிகளும், 2021 ஆம்‌ ஆண்டு 14 வழக்கு களில்‌ 21 குற்றவாளிகளும், 2022 ஆம்‌ ஆண்டு பதிவான 7 கொலை வழக்குகளில்‌ 11 குற்றவா ளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவ லுக்கு அனுப்பப்பட்டனர். அனைத்து  கொலை வழக்குகளும்‌ கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. 2021 ஆம்‌ ஆண்டில்‌ பதிவான வழக்கு களைவிட 2022 ஆம் ஆண்டில் 50 சதவிகித வழக்குகள்‌ குறைவாக பதிவாகியுள்ளன. 2022 ஆம்‌ ஆண்டு பதிவான 39 இறப்பு வழக் கில்‌ 40 இறப்பும்‌, 191 காய வழக்கில்‌ 289 பேர்‌  காயமடைந்துள்ளனர்‌. இது கடந்த ஆண்டை விட சிறிதளவு அதிகரித்துள்ளது.

உதகை, குன்னூர்‌ உட்கோட்ட காவல்‌ நிலைய எல் லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சுற்றுலா தலங்களில்‌, சுற்றுலா பயணிகள்‌ மற்றும்‌  பொதுமக்கள்‌ போக்குவரத்து இடையூறு இல் லாமல்‌ சிரமின்றி வந்து செல்ல உதவும் வகை யில், 9 இருசக்கர ரோந்து வாகனம்‌ மற்றும்‌  நான்கு சக்கர வாகனம்‌ அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. பழங்குடியின மக்களின்‌ வாழ்வா தாரத்தை மேம்படுத்தும்‌ வகையில்‌, அவர் களை ஊக்குவித்து முன்னேற்றும்‌ வகையில்‌ பல வகையான நடவடிக்கைகள்‌ எடுக்கப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நெலாக்கோட்டை காவல்‌ நிலைய எல்லைக்குட்பட்ட பொன் னாணி மற்றும்‌ சோலூர்மட்டம்‌ காவல்‌ நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கையூர்‌ ஆகிய பகுதி களில்‌ பழங்குடியின மக்கள் பயன்‌பெறும்‌ வகையில்‌, பழங்குடியின பன்னாட்டு மையம்‌ திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில்‌ இருக்கும்‌ பழைய மாவட்ட காவல்‌ அலுவல கம்‌ புதிதாக நவீன முறையில்‌ புனரமைக் கப்பட்டு அப்துல்‌ கலாம்‌ திறன்‌ மேம்பாட்டு மையமாக மாற்றப்பட்டுள்ளது. காவலர்கள்‌ மற்றும்‌ குடும்பத்தினர்‌ போட்டி தேர்வுகளில்‌ வெற்றி பெற உதவும் வகையில் நூலகம்‌, காவலர்கள்‌ கற்றுக்கொள்ள கணினி பயிற்சி, சைபர்‌ குற்றங்களை கையாள்வதற்காக சைபர்‌ பயிற்சிக்கூடம்‌ மற்றும்‌ பொதுமக் களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணங் களை நீக்கி, விழிப்புணர்வு வழங்கும்‌ வகை யில்‌ துளிர் மையம் ஆகியவை திறக்கப்பட் டுள்ளன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.