கோவை, செப்.9- தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக் கழக 44 ஆவது பட்டமளிப்பு விழா, கோவை வேளாண் பல் கலை கழகத்தில் திங்களன்று நடை பெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதே நேரத்தில் பல்கலை கழகத்தின் இணை வேந்தரான அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வம் இவ் விழாவை புறக்கணித்தது பேசு பொருளாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தின் 44 ஆவது பட்ட மளிப்பு விழா பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழா அரங்கில் திங்களன்று நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு ஆளு நரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரு மான ஆர்.என்.ரவி தலைமை வகித் தார். இதில், சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் பயிர் இரகங் கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் முனைவர். திரிலோச்சன் மஹா பத்ரா கலந்து கொண்டார். இதில், மொத்தம் 9 ஆயிரத்து 526 மாணவர்கள் இளமறிவியல், முது நிலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்ற னர். 3 ஆயிரத்து 415 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6 ஆயிரத்து 111 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களைப் பெறு கின்றனர். பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேசிய மத்திய அரசின் பயிர் ரகங் கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், முனைவர்.திரிலோச்சன் மஹா பத்ரா பேசுகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், வேளாண் துறை, வேளாண் பல் கலைக்கழகங்கள், தனியார் என பல்வேறு அமைப்புகள் மூலம் 2500 பயிர்கள் கடந்த 14 ஆண்டுக ளில் பருவநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டுள் ளது. 150 உயிரி செறிவூட்டப்பட்ட பயிர் ரகங்கள் உருவாக்கப்பட் டுள்ளது. மண் வளம், வறட்சி, தண் ணீர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம் என்பது சவால்கள் நிறைந் ததாக உள்ளது. குறைவான தண் ணீரை உபயோகப்படுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். விவசாயம், கால்நடை, நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு என, உணவு சங்கிலியை தண்ணீர் பற்றாக்குறை பாதிக்கிறது. 2047 ஆம் ஆண்டு இந்தியா மக்கள் தொகைக்கு 400-430 மில்லியன் டன் தேவைப்படும் நிலையில், தற்போது 328-329 டன் உணவு தானி யங்கள் உற்பத்தியாகின்றது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உணவு உற்பத்தி சிறப்பாக இருந்தபோதும், இந்தியாவில் உணவு உற்பத்தி திறனை அதி கரிக்க வேண்டும் என்ற தேவை இருக்கின்றது. புது புது திறன்களை வளர்த்துக்கொண்டு, வேலை வாய்ப்பு வழங்கும் தொழில் முனை வோர் ஆக பட்டம் பெரும் வேளாண் மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து வெளியேற வேண்டும். மாறி வரும் இந்தியா என்பது உலகத்தில் முதன் மையாக இருக்கும், அதற்கு தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழ கம், போன்ற பல்கலைக்கழகங்கள் பெரிதும் உதவுகின்றன என்றார். தமிழக ஆளுநர், தொடர்ந்து வாய்க்கொழுப்பாக பேசி வருகிற நிலையில், தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாகவே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விழாவில் பங்கேற்க வில்லை என பல்கலைக் கழக வட்டாரத்தில் பரவலாக பேச்சு எழுந் தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் இணை வேந்தரான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பங்கேற்காமல் புறக்கணித் தார். இந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவினையும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.