திருப்பூர், ஜன. 10 – திருப்பூர் வெள்ளியங்காடு அருகே ஈஸ்வரமூர்த்தி நகர் அமுதம் அங்காடி ரேசன் கடையை முறையாக செயல்படுத் தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தல் ஈடுபட்டனர். ஈஸ்வரமூர்த்தி நகர் ரேசன் கடையை இடமாற்றம் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது. கே.எம்.நகர் பூங்காவின் மேற்கே உள்ள காலி இடத்தில் புதிய ரேசன் கடை கட்டி உட னடியாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொது விநியோகத் துறையை வலியுறுத்தியும், அதுவரை மக்களுக்கு சீராக பொருள் விநியோகம் செய்வதை உத்தரவா தம் செய்ய வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோடு சந்திப்பில் புதன் கிழமை காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தின் கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், தெற்கு மாநகரக் குழு உறுப்பினர்கள் பி.பாலன், கே.பொம்முதுரை ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட பெருந் திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பி னர்.