districts

img

தடங்கல் மனு மீது சார்பதிவாளர்கள் அலட்சியம்

சேலம், ஏப்.17- பஞ்சமி நில விற்பனை  தொடர்பான தடங் கல் மனு மீது அலட்சியம் காட்டும் சார்பதி வாளர்கள் மீது நடவடிக்கை கோரி மார்க் சிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கிழக்கு இணை சாதி பதிவாளர் கள் அமுதா மற்றும் சண்முகசுந்தரம் ஆகி யோர், பஞ்சமி நில விற்பனை தொடர்பாக தடங்கல் மனு மீது அலட்சியம் காட்டப்படுவ தாக கூறப்படுகிறது. இவர்கள் மீது கடமையை புறக்கணித்தல் மற்றும் வன்கொடுமை தடுப் புச் சட்டம் பிரிவு 2ன்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர், சேலம் கிழக்கு மாவட்ட பதிவு துறை  அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில், சேலம் மாநகரம் தாத காப்பட்டி வருவாய் கிராமத்தில், பட்டிய லின மக்களுக்கு உரிமையான 16.5 ஏக்கர் நிலங்களை மீட்க கோரி தொடர் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்று வந்தது. இம்மக்களுக்கு பாத்தியப்பட்ட தோட்டி ஊழியம், அனாதினம் நிலங்களை விற்பனை செய்ய, வீட்டு மனை களாக பதிவாக்க நிலத்தரகர்கள், நில விற் பனையாளர்கள் பற்றி தகவல் அளித்து தடங் கல் மனுவை முறையாக முன்வைத்து மார்க் சிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து நினைவூட்டி வந்தனர்.

இந்நிலையில், மாவட்ட பதிவு துறை சேலம் கிழக்கு இணை சார் பதிவாளர்கள் அமுதா மற்றும் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அலுவலர்கள் போலி ஆவணம் உருவாக்கத் தில் ஈடுபடும், நிலத் தரகர்கள் நில விற்பனை யாளர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதா கவும், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சட்ட விரோதமாக பதிவேற்றம் செய்துள்ளதாக வும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பட்டிய லின மக்களுக்கு உரிமையான நில உடைமை சட்டத்திற்கு எதிரானது. இச்செயலில் ஈடு பட்ட இணை சார்பதிவாளர்கள் மீது வன் கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 2ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காத்தி ருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர். சேலம் மாநகர குழு உறுப்பினர் மா.தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில், கட்சியின் மாநகர கிழக்கு செயலா ளர் பொன்.ரமணி, மாநகரக்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.