திருப்பூர், மே 25– காங்கயம் நகராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட் டப்பட்ட முழு நேர கிளை நூலகத்தை மாநில செய் தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் புதனன்று திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், காங்கயம் பேருந்து நிலை யம் அருகே ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் முழு நேர கிளை நூலகம் அமைக்கப்பட்டுள் ளது. இந்த நூலகத்தை திறந்து வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அங்கிருந்த புத்தகங்களைப் பார்வையிட்டார். அத்து டன் காங்கயம் நகராட்சி வாரச் சந்தை வளா கத்தில் ரூ.9.62 கோடி மதிப்பீட்டில் புதிய தின சரி, வாரச்சந்தை கடைகள் கட்டும் பணி, ரூ.4 கோடியே 4 லட்சம் மதிப்பில் அண்ணா நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட் டத்தில் பதுமன் குளம் நிலையை மேம்ப டுத்தும் பணி, 13 ஆவது வார்டில் ரூ.25 லட்சத் தில் பொது சுகாதார சமுதாயக் கழிப்பிடம் கட்டும் பணி, கேஜிகே நகரில் அதே மதிப்பில் ஒரு சமுதாய கழிப்பிடம் கட்டும் பணி ஆகிய வற்றையும் அவர் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் உட்பட அரசுத்துறை அதிகாரி கள் பலர் கலந்து கொண்டனர்.