டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு மாநில சம்மேளனமுடிவின்படி பணி நிரந்தரம், பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி தாரபுரம், காங்கேயம், பல் லடம் ,அவிநாசி, உடுமலை ஆகிய பகுதிகளில் திங்களன்று மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.