districts

img

மின்மயானத்தை ஈஷா மையம் நிர்வகிக்ககூடாது

கோவை, மார்ச் 21- மின் மயானங்களை ஈஷா யோகா மையத் தின் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடாது எனக் கூறி கோவையில்  முற்போக்கு அமைப்பி னர் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.  கோவையை மையமாக வைத்து போலிச் சாமியார் ஜக்கியின் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் மீது தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் புகார்கள் வந்து குவிகிறது. அண்மையில், யோகா பயிற்சிக்கு  சென்ற இளம் பெண் சுபஸ்ரீ, திடீரென காணா மல் போனார், பின்னர், ஈஷா யோகா மையத் தின் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மீட் கப்பட்டார். இந்த பெண் மரணத்தில் உரிய  விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங் களை நடத்தி வந்த நிலையில், அவசர அவசர மாக நஞ்சுண்டாபுரத்தில் ஈஷா மையம் நிர் வகிக்கும் மின் மயானத்தில் சுபஸ்ரீ குடும்பத்தி னரின் ஒப்புதல் இல்லாமலேயே எரியூட்டப் பட்டது. இதற்கு முன்னர் ஆந்திராவை சேர்ந்த ஒருவர் இம்மையத்தில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. தற்போது, ஈஷாவில் தங்கியிருந்த கணேஷ் என்கிற நபர் காணாமல் போனதாக ஈஷா மையமே காருண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. வன ஆக்கிரமிப்பு, கட் டட விதிமீறல், யானைகள் வழித்தடம் மறிப்பு என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது, மனித உயிர்கள் பறி போகிற அதிர்ச்சியூட்டும் புகார்கள் வந்து  கொண்டிருக்கிறது. சுபஸ்ரீ உடலை குடும் பத்தினருக்கு தெரியாமல் எரியூட்டப்பட்ட சம்பவம் பலருக்கும் சந்தேகத்தை எழுப்பி யது.  

இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6க்கும் மேற்பட்ட மின் மயானங்களை நிர்வகித்து வரும் ஈஷா யோகா மையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து  மீட்க வேண்டும். ஈஷா யோக மையத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், மின் மயானங்கள் ஈஷா யோகா  மையத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கக் கூடாது. ஈஷாவிற்கு சென்ற நபர்கள் மாய மானதால் இதுகுறித்து உரிய விசாரணை  நடத்தவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் தலைமை ஏற்றார். இதில்,  பொதுவுடமை இயக்கங்கள், தபெதிக, ஆதித் தமிழர் பேரவை, வெள்ளிங்கிரி மலை காப்பு இயக்கம், தமிழ் சிறுத்தைகள், புரட்சிகர இளைஞர் முன்னணி, பழங்குடியின மக்கள்  மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்பு களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர் கள், “திருடன் கையில் சாவியா, உடனடியாக மின் மயானத்தை நிர்வகிக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” உள்ளிட்ட பதாகை கள் ஏந்தியும், முழக்கங்களையும் எழுப்பி யும் அரசின் கவனத்தை ஈர்த்தனர்.