districts

img

நெருங்கும் தீபாவளி பண்டிகை! எதிர்பார்ப்பில் கார்மெண்ட்ஸ் தையல் தொழிலாளர்கள்

நாமக்கல், செப். 18- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம் குமாரபாளையம் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் ஏராளமான கார்மெண்ட்ஸ்  தொழில் நிறுவனங்கள், தையல் கடை கள் செயல்பட்டு வருகிறது. கார் மெண்ட்ஸ் தொழில் நிறுவனத்தில் மொத் தமாக வெளி இடங்களில் இருந்து ஆர்டர்கள் பெறப்பட்டும். வெள்ளை மற் றும் பல வண்ணங்களில் சட்டைகளை ஆர்டரின் பேரில் தைத்துக் கொடுப் பது வழக்கம். அதேபோல தையல் கடை களில், அவ்வப்போது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வழங்கும் துணி களை வாங்கி அவர்களுக்கேற்ப  அளவெடுத்து அதை தைத்துக் கொடுப் பது என தொழில் செயல்பட்டு வருகி றது. இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கூடு தலாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இது குறித்து பள்ளிபாளையம்  சேலம் சாலையில் கார்மெண்ட்ஸ்  தொழில் நிறுவனம் நடத்தி வரும் உரிமை யாளர் கணேசன் என்பவர் கூறியதா வது, வருடம் ஒருவர் முழுவதும் கார் மெண்ட்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தா லும், தீபாவளி பண்டிகை மாதத்தில் தான் அதிகப்படியான வேலைகள் இருக் கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  வரை இரவு பகலாக அதிகளவு வேலை கள் இருக்கும். தற்போது பல்வேறு சூழல்கள் தொழில் போட்டி உள்ளிட்ட  பல காரணங்களால் முன்பிருந்த அளவுக்கு தற்போது கார்மெண்ட்ஸ் தொழில் சிறப்பாக இல்லையென்றா லும், அவ்வப்போது மொத்தமாக கிடைக்கும் ஆர்டர்களை பொறுத்து பணிகளை செய்துவருகிறோம். தற் போது தீபாவளி சீசன் துவங்கி உள்ள தால் வெளிப் பகுதியில் இருந்து அதிகளவு ஆர்டர்கள் வரத் துவங்கி யுள்ளது. நாங்கள் தைத்துக் கொடுக் கும் சர்ட்டுகள்,பனியன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஜவுளி உடை கள் பல்வேறு வேலைப்பாடுகள் செய்த பிறகு,பேக்கிங் செய்யப்பட்டு, ஈரோடு  உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் பல  ஊர்களுக்கும் தீபாவளி வியாபாரத் திற்காக கொண்டு சென்று விற்கப்ப டும். அந்த வகையில் தற்போது ஓரளவு  ஆர்டர்கள் வரத் துவங்கி உள்ளதால்,  தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணி களை மேற்கொண்டு வருவதாக தெரி வித்தார்.  பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் தையல் கடை நடத்தி வரும் மோகன் குமார் என்பவர் கூறும் பொழுது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே, தையல் தொழிலை மேற்கொண்டு வருகி றேன் . முன்பு அதிகளவு சர்ட்டுகள், பேண்ட் பிட்டுகள் கொடுத்து அளவெ டுத்து தைக்க சொல்லி நிறைய ஆர்டர்கள்  வரும். தற்போது தையல் கூலி அதிகரிப்பு  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடைகளை தைத்து போடும் பழக்கம்.  வெகுவாக குறைந்து விட்டது. சராசரி யாக சர்ட், பேண்ட் பிட்டுகள் வாங்கி  அதை தையல் கடையில் அளவெடுத்து  தைப்பதற்கு கொடுத்தாலும் குறைந்த பட்சம் ஒரு நபருக்கு ரூ.1200 முதல் 1500  ரூபாய் வரை வந்து விடுகிறது. இதுவே  ரெடிமேடாக எடுத்தால் ரூ.400 ரூபாய்  முதல் 500 ரூபாய்க்குள் பேண்டுகளும்,  300 முதல் 400 ரூபாய்க்குள் சர்ட்டுகளும்  கிடைக்கும். இதனால், தையல் கடைக ளுக்கு வருகிற ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. குறிப்பாக பொருளா தாரம் ஒரு சவாலாக உள்ளது. இத னால், தையல் தொழில் மெல்ல மெல்ல  அழிந்து வரும் தொழிலாக மாறி  வரு கிறது. இருந்த போதிலும் எங்களுக்கென உள்ள நிரந்தரமான வாடிக்கையாளர் கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவ ளித்து வருவதால், தையல் தொழிலை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். தற்போது தீபாவளி சீசன் துவங்கி உள்ள தால், அநேகமாக அடுத்த வாரத்தில்  இருந்து அல்லது அக்டோபர் மாதம்  இரண்டாவது வாரத்தில் இருந்து தீபா வளி உடைகளை எடுக்கும் வாடிக்கையா ளர்கள், எங்களிடம் துணிகளை தைக்க  ஆர்டர் கொடுப்பார்கள் என எதிர்பார்ப் போடு காத்திருப்பதாக தெரிவித்தார். -எம்.பிரபாகரன்