திருப்பூர், ஜூலை 29 – அவிநாசி பேரூராட்சி பகுதியில் முன்னாள் சபாநாயகரும், தற்போதைய எம்எல்ஏவுமான ப.தனபால் அடிக்கல் நாட்டி எட்டு ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ள சமுதாயக்கூடம் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட் டுக்கு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அவிநாசி முத்துச்செட்டிபாளையம் கிளைச் செயலாளர் அவிநாசியப்பன் உள்ளிட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: அவிநாசி பேரூராட்சி 8, 9 ஆவது வார்டுக்கு உட்பட்ட முத்து செட்டிபாளையத்தில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட எளிய மக்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெற்றன. ஆனால் பின்னர் நிறுத்தப்பட்டு விட்டது. எட்டு ஆண்டுகளாக எந்த வொரு கட்டுமானப்பணியும் நடக்கவில்லை. எனவே மக்கள் நலனுக்காக இந்த சமுதாயநலக்கூடத்தை விரைந்து கட்டிக் கொடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.