districts

img

ஊரக வேலை திட்ட தொழிலாளர்களின் சம்பளப் பாக்கியை வழக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

உடுமலை, பிப்.1- ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு பல மாதமாக வழங்கப்படாமல் இருக் கும் சம்பளத்தை உடனடியாக வழங்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் வியாழக்கிழமை குடி மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் கடந்த நவம்பர் மாதம் முதல் ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளப் பாக்கியை வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் குடிமங்கலம் வட் டார வளர்ச்சி அலுவலகத்தில் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. இதை யடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நவம்பர் மாதத்திற்கான இரண்டு வாரச் சம்பளம் தற்பொழுது  போடப்பட்டுள்ளது என்றும், நிலுவை யில் இருக்கும் சம்பளத்தை இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று உறுதி கூறியதால் காத்தி ருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் ஊரக வேலை உறுதி திட்டத் தின் பல குறைகள் மற்றும் சம்பள பாக்கி  குறித்து மனுவாகவும் அளிக்கப்பட் டது.  முன்னதாக நடைபெற்ற இந்த  போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.சசிகலா தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள்  ஓம்பிரகாஸ், ஆர்.கலைவாணி,  கிளை செயலாளர்கள் வேலுச்சாமி, சித்ரா உட் பட திரளான  தொழிலாளர்கள் கலந்து  கொண்டனர்.