நாமக்கல், பிப்.22- ராசிபுரம் அருகே சாலை விபத்தில் படுகா யமடைந்தவரை மீட்டு அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்து, பின்னர் மருத்து வமனைக்கு நேரில் சென்று உரிய சிகிச்சைய ளிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி பகு தியைச் சேர்ந்தவர் ரவி (45). இவர் தனது உற வினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு சிங்களாந்தபுரம் மயானத்திலிருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். போடிநாயக்கன்பட்டி ஓணான் கரடு பகுதி யில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந் தார். மயங்கிய நிலையில் சாலையில் கிடந்த அவரை, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், ராசிபுரம் வட்டத்தில் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள அவ்வழி யாகச் சென்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, மீட்டு உடனடியாக ராசிபுரம் வட் டாட்சியரின் அரசு வாகனத்தில் ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தார். மேலும், அரசு மருத்துவமனை மருத்து வர்களிடம் அந்த நபருக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, ராசிபுரம் அரசு மருத்துவமனை யில் விபத்துக்குள்ளான நபருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்திய தோடு, சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் ஏ.ராஜ்மோகனை நேரில் சென்று மருத்துவம னையில் உரிய சிகிச்சையளிப்பது உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். இதன்பின் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட ஆட்சியர், உரிய சிகிச்சையளிக்க உத்தர விட்டு பின் கள ஆய்வுப் பணிகளை மேற் கொண்டார்.