districts

img

பாஜக அரசு 2000 ஆண்டுக்கு முந்தைய அடிமை நிலைக்கு தொழிலாளர்களைத் தள்ளப்பார்க்கிறது: ஜி.சுகுமாறன்

திருப்பூர், மார்ச் 21 - மோடி தலைமையிலான ஒன்றிய  பாரதிய ஜனதா அரசு 2 ஆயிரம் ஆண் டுகளுக்கு முந்தைய அடிமை  நிலைக்கு இந்திய உழைப்பாளர் களைத் தள்ளப் பார்க்கிறது. எனவே  நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை படுதோல்வி அடை யச் செய்ய வேண்டும் என்று சிஐடியு  மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் கூறினார். இந்தியா வாழ வேண்டும், மோடி  அரசு வீழ வேண்டும் என்ற தலைப்பில்  திருப்பூரில் சிஐடியு சார்பில் தேர்தல்  சிறப்புப் பேரவை நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி  தலைமையில் நடைபெற்ற இந்த  பேரவையில் பங்கேற்றுச் சிறப்புரை  ஆற்றிய ஜி.சுகுமாறன் பேசுகையில், இதுவரை நடைபெற்ற 16 நாடாளு மன்றத் தேர்தல்களில் இருந்து இப்போது நடைபெறக் கூடிய 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல்  வேறுபட்டது. மிகவும் முக்கியத்து வம் வாய்ந்தது. 200 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. என்ன உடை உடுத்த வேண்டும் என்று கூட உரிமை இல்லாத நிலையில், போராடித்தான் ஒவ்வொரு உரிமை யாகப் பெற்றனர்.  இன்று தொழிலாளர்கள் பெற்றி ருக்கும் உரிமைகள் நீண்ட நெடும் போராட்டத்தின் விளைவாகக் கிடைத்தது. கடந்த 76 ஆண்டு கால மாக போராட்டத்தின் மூலம் தொழி லாளர்கள் பெற்றிருக்கும் உரிமைக ளைப் பாதுகாத்து வருகிறோம். ஆனால் மோடி அரசு 44 சட்டங்கள்,  4 தொழிலாளர் சட்டத் தொகுப்புக ளாக மாற்றிவிட்டது. ஆர்எஸ்எஸ், பாஜக மநு ஸ்மிருதியின் மீது நம் பிக்கை கொண்ட அமைப்பாகும் மநு  ஸ்மிருதி என்பது சாதிய சமூக ஏற்றத் தாழ்வை அடிப்படையாகக் கொண் டது. பெண்களை அடிமைகளாக பார்க்கக் கூடியது. தொழிலாளர்கள் உரிமை இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என நினைக்கக் கூடியது. பாஜக 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அடிமை நிலைக்கு இந்திய உழைப்பாளி மக்களைத் தள்ளப் பார்க்கிறது. அது மட்டுமின்றி மாநில அரசு களை நிர்பந்தப்படுத்தி, மானியம் தர முடியாது என்று சொல்லி மின்சா ரத் துறை, பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது.

அதன் மூல மும் தொழிலாளர்கள் பெற்று வரும்  சட்ட உரிமைகளைப் பறிக்க முயற் சிக்கிறது. எனவே தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்றிருக்கும் உரிமைக ளைப் பாதுகாக்கவும், ஜனநாயகத் தைப் பாதுகாக்கவும் பாரதிய ஜன தாவை அவசியம் தோற்கடிக்க வேண்டும் என்றார்.  இதில், சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், சிஐடியு கட்டுமா னத் தொழிலாளர் சம்மேளனப் பொதுச் செயலாளர் டி.குமார், சிஐ டியு மாவட்டத் துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் பி.முத்துசாமி உள்பட சிஐடியு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். ரூ.1.25 லட்சம் தேர்தல் நிதி சிஐடியு தேர்தல் சிறப்புப் பேர வைக் கூட்டத்தில் பல்வேறு துறை வாரியான சங்கங்கள் முதல் கட்ட மாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் தேர்தல்  நிதியாக வழங்கினர். சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் ரூ.50 ஆயிரம், அந்த சங்கத்தின் திருப் பூர் மண்டலப் பொதுச் செயலாளர் பி.செல்லதுரை ரூ.5 ஆயிரம், அந்த  சங்கத்தைச் சேர்ந்த ஜான் பாலி ரூ.5 ஆயிரம், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் ரூ.30ஆயிரம், மின்வாரிய மத்திய அமைப்பு சார்பில் ரூ.15 ஆயிரம், கட்டுமானத் தொழிலாளர் சங்கம் ரூ.10 ஆயிரம், பனியன் தொழிலாளர் சங்கம் ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1  லட்சத்து 25 ஆயிரத்தை சிஐடியு தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறனிடம் வழங்கினர்.