கோவை, ஆக.22- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எளிய மக்களுக்கு இலவசமாக வீடு கட் டித்தரும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். வீடிருந்தும் பட்டா இல்லாதவர்களுக்கு உட னடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். வேட்டைக்காரன் புதூர் பேரூ ராட்சியில் அமல்படுத்தபட்ட 100 நாள் திட் டத்தை நிறுத்தியதை கண்டித்து கோவை மாவட்டம், ஆனைமலை வட்டாட்சியர் அலு வலகம் அருகே அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் ஒன்றிய துணைத்தலைவர் கே.பழனிச் சாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் எ.முத்துசாமி, பொருளாளர் கே.ராம சாமி, துணைச்செயலாளர் கே.செல்வம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செய லாளர் ஸ்டாலின் பழனிச்சாமி வாழ்த்துரை யாற்றினார். விதொச மாவட்டச் செயலாளர் துரைசாமி கோரிக்கை விளக்கி உரையாற் றினார். இதில், சிபிஎம் ஆனைமலை ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பரமசிவம் வாழ்த்தி பேசி னார். இதில், திரளான விவசாய தொழிலாளர் கள் கலந்து கொண்டனர். இதேபோன்று கோரிக்கைகள் சம்பந்த மாக விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். ஆனால், சார் ஆட்சி யர் இல்லாததால் மனு கொடுக்க வந்த விவ சாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், தாலுகா செயலா ளர் கே.ஏ.பட்டீஸ்வரமூர்த்தி, மாதர் சங்க தாலுகா செயலாளர் ரேவதி, தாலுகா பொரு ளாளர் சித்ரா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் ரவி, தமுஎகச தாலுகா தலைவர் மகேந்திரன், வாலிபர் சங்க நிர்வாகி ஹால் காஸ்ட்ரோ உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.