திருப்பூர், மே 16 - மடத்துக்குளம் அருகே குமரலிங்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டில் பட்டா வழங்கியும், நில அளவீடு செய்து ஒப்படை வழங்காமல் கால தாமதம் செய்யப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து, உடனடியாக நில அளவீடு செய்து வழங்க கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பலமுறை மனுகொடுத்தும் குமரலிங்கத்தில் பட்டா வழங்கிய இடத்தை நில அளவீடு செய்து தர வருவாய் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. விவசாய தொழிலாளர் சங்கம் சார் பில் ஆர்.ஆறுமுகம், இ.மாசாணம், ஆர்.வி. வடிவேல், ஆர்.பன்னீர்செல்வம், எம்.காந்தி, எம்.கருணாநிதி, ஜான்கண்ணன், ஆறுமுகம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண் டனர். பின் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் நிலம் பிரிக்கப்பட்டு அனைவருக்கும் ஒப்படை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நிலம் ஒப்படைப்பை விரைந்து முடிக்க வேண்டும். பயனாளிகள் வீடுகட்ட அரசு உதவிகள் செய்ய வேண்டும் எனவும் சங்கத்தின் சார்பில் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.