புதுதில்லி,டிச.18- “தேஜஸ்” எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்லவும், ரயில்வே டிராக்மேன் களுக்கு “இரட்சக்” என்ற பாதுகாப்பு கருவி வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் ரயில்வே அமைச்சர் வாக்குறுதியளித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் சு.வெங்க டேசன் எம்.பி., அமைச்சரை சந்தித்து பேசும் பொழுது “சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே பரிந்துரைத்த நிலையில் ரயில்வே போர்டு இன்னும் அனுமதி கொடுக்காமல் உள்ளது. அமைச்சர் தலை யிட்டு அனுமதி வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். இதனை நிறைவேற்ற நட வடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். பின்னர் இரயில் பவனில் டிஆர்இயு மற்றும் ஐசிஎஃப் யுனைட்டட் வொர்க்கர்ஸ் யூனியன் தலைவர்களுடன் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்வை சந்தித்து போது “தண்டவாள பணியின் போது ரயில் மோதி மரணிக்கும் கொடுமை யை தடுக்க ரயில்வே டிராக் மேன்களுக்கு உடனடியாக இரட்சக் என்ற பாதுகாப்பு கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கூறினார். அதேபோல 4800 ,5400 கிரேடு பே-க் களுக்கு பதவி உயர்வு வழங்க அக்கவுண்ட்ஸ் அல்லாத கேட்டகரிகளுக்கு ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளதை சங்கப் பிரதிநிதிகள் வரவேற்றனர். அதில் விடுபட்ட கேட்டகரிகளுக்கும் அதற்கு விதிக்கப்பட்டுள்ள 50 சத உச்சவரம்பு 5400 கிரேடு பே பதவி உயர்வு பெறுவதை தடுப்ப தாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டிய போது அமைச்சர், சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் பிரச்ச னைகள் தீர்க்கப்படுவதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்படுகின்றன என்றும் கூறினார்.
தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலை உடனே நடத்துக!
சங்கம், 4600 என்ற உச்ச கிரேடு உள்ள அனைத்து கேட்டகரிகளுக்கும் இந்த விதியை பொருத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் புதிய தொகுப்பு சட்டத்தின்படியே உயர்ந்தபட்சம் ஐந்து ஆண்டுகள்தான் என்ற போதிலும் 9 ஆண்டுகள் அங்கீகார தேர்தல் நடத்தாமல் இருப்பது தொழிற் சங்க ஜனநாயகத்திற்கு முரணானது என்று சுட்டிக்காட்டி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டது. தொழில் உறவு தொகுப்பு சட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் நாடாளுமன்றத் தேர்த லுக்குள் அமல்படுத்தப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று நாம் கூறிய போது “ஆம் அதற்குள் தொகுப்பு சட்டம் அமலாவது சாத்தியமில்லை என்று ரயில்வே அமைச்சர் ஒத்துக் கொண்டார்”.எனவே சங்கம், அவரை 2013 தேர்தலில் 20 சத வாக்கு பெற்ற சங்கங்களுக்கு அங்கீ கார அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது அவர் இதனை பரிசீலிப்பதாக வாக்குறுதி அளித்தார்.
ரிஸ்க் அலவன்ஸ் வழங்கிடுக!
ட்ராக்சன் சிக்னல், பிரிட்ஜ் தண்ட வாளப்பிரிவு ஆர்ட்டிசான்கள் போன்ற தொழிலாளர்களும் பணியின்போது ரயில் மோதியோ மின்சார அதிர்ச்சியின் காரண மாகவோ உயிரிழக்க நேரிடுவதால் அவர் களுக்கும் ரிஸ்க் அலவன்ஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன் வைத்த போது அதை பரிசீலிப்பதாக வாக்குறுதியளித்தார். கேட்டரிங் டிபார்ட்மெண்டில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்து பின் நிரந்தரமான பேரர்களுக்கு அவர்களின் அந்த பணி காலத்தின் பாதியை பென்சனரி பயன்களுக்கு கணக்கிட எடுத்துக்கொள்ள பல நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ள நிலை யில் இதுகுறித்து பொதுவான உத்தரவை ரயில்வே அமைச்சகம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பி உள்ளோம். அதேபோல எக்ஸ் கேடரில் உள்ள தண்டவாள பழுது கண்டுபிடிக்கும் தொழிலாளர்களின்(USFD) 18 பேரை நிரந்தர மாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் பரிசீலிக்க ஏற்றுக்கொண்டார். தெற்கு ரயில்வேயில் முறைப்படி பணியமர்த்தப்பட்ட 531 சப்ஸ்டிடி யூட்டுகளான ஆக்டோபரண்டீசுகள் பணி நிரந்தரமும் பதவி உயர்வும் இன்றி உயர்நீதிமன்ற வழக்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி அவர்களுக்கு அந்த வழக்கை விரைந்து முடிக்க ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. டிஆர்இயூ சார்பாக 13 கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அந்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார். பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை யில் வந்தே பாரத் ரயிலுக்கான ட்ராக்சன் மோட்டார் இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் அதனை ரயில் பெட்டி தொழிற்சாலையிலேயோ அல்லது சித்தரஞ்சன் லோகோ மோட்டிவ் ஒர்க்சிலோ அல்லது பெல் மூலமாகவோ உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் ஆத்ம நிர்பார் பூர்த்தி அடையும் என்று ரயில் பெட்டி தொழிற்சாலை சங்கம் கூறியதை பரிசீலிப்பதாக கூறினார்.