சுற்றுலா வேன் கவிழ்ந்து 13 பேர் காயம்
உதகை, மே 1- மேல் கூடலூர் அருகே சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 13 பேர் காயமடைந்தனர். திருப்பூர் மாவட்டத்திலிருந்து கூடலூர், உட்பட்டியில் ஒரு விழாவில் கலந்து கொள்ள 22 வடமாநிலத்தவர்கள் சுற்றுலா வேன் மூலம் உதகை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மேல் கூடலூர் அருகே சென்றபோது, வாகனம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவ லறிந்த கூடலூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த வர்களை மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேன் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயடைந்தனர்.
காவல்துறை சார்பில் இன்னிசை நிகழ்ச்சி
கோவை, மே 1- கோவையில், மாநகர காவல்துறை சார்பில் ஞாயிறன்று இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். கோவை மாநகரம் - உக்கடம் பெரிய குளத்தில் அமைந்துள்ள ஐ லவ் கோவை என்ற பகுதி யில், கோவை மாநகர காவல் துறையின் சார்பில் இன்னிசை நிகழ்வு நடைபெற்றது. காவல்துறையும், பொதுமக்களும் இணைக்கும் நோக்கத்துடன் கோவை மாநகர காவல் துறை யின் சார்பில் இன்னிசை குழு புதிதாக அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. இந்த இன்னிசை நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணை யாளர் வெ.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இன்னிசை நிகழ்வை பொதுமக்கள் கேட்டு ரசித்தனர்.
டாஸ்மாக் கடை மேலாளரை தாக்கி பணம் பறிப்பு
கோவை, மே 1- ஆலாந்துறை அருகே டாஸ்மாக் கடை மேலாளரை தாக்கி, ரூ.7 லட்சத்தை பறித்து சென்ற நபர்களை காவல் துறை யினர் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், சிறுவாணி சாலை, பூலுவம்பட்டியில் அரசு டாஸ் மாக் மதுக்கடை செயல்பட்டு வருகி றது. இக்கடையில் வடிவேலம்பாளை யத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (40) என்பவர் மேலாளராக பணியாற்றி வரு கிறார். இந்நிலையில், ஞாயிறன்று டாஸ் மாக் கடையில் மதுபானங்கள் அதி கம் விற்பனையாகி இருந்தது. மொத்தம் ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் வசூலாகி இருந் தது. இந்நிலையில், மே தினத்தை முன் னிட்டு திங்களன்று டாஸ்மாக் கடைக ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந் தது. எனவே வசூலான பணத்தை செவ் வாயன்று தான் வங்கியில் கட்ட முடி யும். இதனால் கடையில் பணத்தை வைத் திருந்தால் பாதுகாப்பாக இருக்காது என நினைத்து, தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என சண்முகசுந்தரம் முடிவு செய்து, இரவு 11.30 மணியளவில் கடையை பூட்டி விட்டு பணத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். வடிவேலம்பாளையத்தை நெருங்கிய வேளையில் அங்குள்ள ஒரு சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர், சண்முக சுந்தரத்தை வழிமறித்தனர். அப்போது 3 பேரும் சேர்ந்து, சண் முகசுந்தரத்தை தாக்கி விட்டு அவரிட மிருந்த ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் பணத்தை பையுடன் பிடுங்கிச் சென்ற னர். இதனால், அதிர்ச்சியடைந்த சண் முகசுந்தரம் ஆலாந்துறை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால், பணம் பறித்தவர் கள் யாரும் சிக்கவில்லை. சண்முகசுந்த ரம் பணத்துடன் செல்வதை நோட்ட மிட்டே, அடையாளம் தெரியாத நபர் கள் அவரை பின் தொடர்ந்து, சென்று பணத்தை பறித்தது விசாரணையில் தெரியவந்தது. பணம் பறித்த நபர்கள் என்பது குறித்து பேரூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டி தலைமையிலான போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கடன் பிரச்சனையால் தற்கொலை
ஈரோடு, மே 1- கோபி அருகே கடன் பிரச்சனையால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மின்நகர் பகுதியில் வசித்து வருபவர் ரேவதி, இவரது கணவர் ராஜ் குமார் (45). இவர், ரேவதி பர்னீச்சர்ஸ் என்ற கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். சூதாட்டத்தில் ஈடுபடு கொண்ட தால், வியாபரத்தில் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதில், கடனாளி யான ராஜ்குமார், வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் மனம் வெறுத்து தனது வீட்டில், சேலையை கழுத்தில் மாட்டி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்து ரேவதி தனது மகளுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு, ஆம்புலன்ஸ் மூல மாக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத் துவர் பரிசோதித்து வரும்வழியிலேயே இறந்துவிட்டதாகக் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கோபி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 5 பேர் கைது
சேலம், மே 1- சேலம் அருகே 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் அருகே 14 வயது சிறுமிக்கு மளிகை கடையில் வேலை பார்த்து வந்த வினீத் என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை ஆசைவார்த் தைகள் கூறி வினீத் அழைத்துச் சென்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் இதில் தொடர்புடையதாக கூறப்படும் வினீத் என்கிற அசார், விக்னேஷ், சீனிவாசன், ஆகாஷ் மற்றும் அருண்குமார் ஆகிய 5 பேரை சூரமங்கலம் போலீசார் பிடித்து விசா ரணை மேற்கொண்டனர். இதில் சிறுமியை நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த 5 பேரையும் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விந்தணு மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொண்ட னர்.
9,149 பேருக்கு ஊக்கதொகை
திருப்பூர், மே 1- திருப்பூர் மாநகராட் சியில் வரி செலுத்துவதில் திங்கள் வரை 9,149 நபர்கள் வரிகளை செலுத்தி உள்ளனர். அவர்களுக்கு சுமார் ரூ.24,06,309 ஊக்கத் தொகையான 5 சதவீதத்தின் படி வழங்கப்பட்டுள்ளது என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித் துள்ளார்.
“சர்க்கியூட் பஸ்” – சுற்றுலா பயணிகள் வரவேற்பு
உதகை, மே 1- உதகையி்ல் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக அரசு போக்குவரத்து கழகம் மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள “சர்க்கியூட் பஸ்” எனப்படும் சுற்று பேருந்து சேவை, சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணி களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாவரவியல் பூங்கா, சிறுவர் பூங்கா, தொட்டபெட்டா, முதுமலை சரணா லயம், படகு இல்லம் ஆகிய பகுதிகள் களை கட்டி வருகிறது. குறிப்பாக தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் திரள்வ தால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படு கிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஆண்டுதோறும் “சர்க்கியூட் பஸ்’ எனப்படும் சுற்று பேருந்து சேவை தொடங் கப்படும். இந்த பேருந்து உதகையிலுள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்ட பெட்டா மலை சிகரம், ரோஜா பூங்கா (நுழைவு வாயில்), சிறுவர் பூங்கா ஆகிய பகுதிக ளுக்கு இயக்கப்படுகிறது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை என 20 பேருந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்து கள், ஃபிங்கர்போஸ்ட், ஆவின் நிறுவனம், மத்தியப் பேருந்து நிலையம், காந்தல் பகுதி களை மையமாக கொண்டு இயக்கப்படு கின்றன. பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்க ளுக்கு ரூ.50, குறிப்பிட்ட சுற்றுலா தலத்தை பார்க்க செல்பவர்களுக்கு ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார், வேன்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல முடியாத நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த சர்க்கியூட் பேருந்து சேவை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளி டையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அனைத்து பேருந்துகளும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன.
குடியிருப்புக்குள் புகுந்த குரங்குகள்
குடியிருப்புக்குள் புகுந்த குரங்குகள் கோவை, மே 1- கோவை மாநகரப் பகுதிகளில் குரங்குகள் சுற்று திரிவ தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாநகரம், உக்கடம் பகுதியில் அல் அமீன் காலனி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. அல் அமீன் காலனியில் இருந்து சுமார் 5 கி.மீ., தாண்டி தான் குரங்குகள் அவ்வப்போது வந்து செல் லும். தற்போது அல் அமீன் காலனி குடியிருப்பு பகுதிக்கும் குரங்குகள் வரத்துவங்கியுள்ளது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று காலை முதல் அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள், அங் குள்ள மின்கம்பங்கள் மீது ஏறி அங்கும் இங்கும் தாவி வரு கின்றன. மேலும், அங்குள்ள வீடுகளுக்குள்ளும் செல்ல முயல்வதால், அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டின் கதவு கள் மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு வீடுகளுக்கு உள் ளேயே தஞ்சமடைந்துள்ளனர். குழந்தைகள் முதல் அப் பகுதியில் உள்ள மளிகைக்கடை, பழக்கடை வியாபாரிகள் வரை அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையே அப்பகுதி மக்கள் சிலர் இக்குரங்குகளை விரட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் மாநகராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடிப்பதற்கு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளைப்பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகள் வனத்துறை அலட்சியம்: விவசாயிகள் வேதனை
தருமபுரி, மே 1- வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம் பகுதி வனத்திலிருந்து வெளியே வரும் காட்டு யானைகள் ஒரு பக்கம் விளைப்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தற்போது கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள், மயில்கள் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாயிகளின் உழைப்பான விளைப்பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயத்தையே வாழ்வாதரமாக கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினர் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வனவிலங்குகளால் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, தங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு எதாவது ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டாவிடில், மாண்டு போவதை தவிர வேறு வழியில்லை எனவும், இல்லையென்றால் விவசாயத்தை கைவிட்டு விட்டு மாற்று தொழில் தேடி புலம் பெயர்ந்து செல்ல வேண்டிய சூழலுக்கு ஆளாகிவிடுவோம் என வேதனை தெரிவிக்கின்றனர்.