districts

கோவை முக்கிய செய்திகள்

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை மதிக்காத டாஸ்மாக் நிர்வாகம்

சிஐடியு புகார்

ஈரோடு, டிச. 9- குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை மதிக்காத டாஸ்மாக் நிர்வாகத்தின் அணுகுமுறை என்பது தொழிலாளர் விரோத நடவடிக்கைகளாகவே உள் ளது என குற்றம்சாட்டி, ஈரோடு ஆட்சியரி டம் சிஐடியுவினர் திங்களன்று புகார் மனு  அளித்தனர். 

அம்மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு வருவாய் மாவட்டத்தில் 10 வட் டங்களிலும் டாஸ்மாக் மதுபான சில் லரை விற்பனைக் கடைகள் 183 உள் ளது. இக்கடைகளில் மேற்பார்வையா ளர், விற்பனையாளர், உதவி விற்பனை யாளர் என்ற பிரிவுகளில் சுமார் 1050  ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  இந்த ஊழியர்கள் பெற்று வருகிற சம்ப ளம், போனஸ் உள்ளிட்ட அனைத்து பலன்களும் சிஐடியு சங்கமும், இதர  சங்கங்களும் முன்வைக்கும் கோரிக் கைகளை டாஸ்மாக் நிர்வாகம் ஏற் றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவு செய்து வழங்கப்பட்டு வரு பவை ஆகும். ஊழியர்களின் கோரிக் கையை ஏற்காத நிலையால் 1948 ஆம்  வருடத்திய குறைந்தபட்ச ஊதிய சட்டப் படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விட  மிகக் குறைவான ஊதியமே இந்த ஊழி யர்கள் பெற்று வருகிறார்கள். அரசு  அல்லது டாஸ்மாக் நிர்வாகம் நிர்ண யித்த தொகையில் விற்பனை செய்யப் படுகிறதா, கடையின் இருப்பு, விற் பனைத் தொகை முறையாக கையாளப் படுகிறதா என்பதை அதிகாரிகள், தணிக் கையாளர்கள் ஆய்வு செய்கிறார்கள். ஆய்வில் கண்டறியப்படும் குறைகள் மீது எவ்வித விசாரணையும் இல்லா மல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடை ஊழியர்கள் குறித்த எவ்வித வழி காட்டும் நெறிமுறையும் கடைப்பிடிப்ப தில்லை. மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத் தின் அணுகுமுறை என்பது தொழிலா ளர் விரோத நடவடிக்கைகளாகவே உள்ளது. ஆகவே, டாஸ்மாக் மாவட்ட நிர்வாகத்தின் தவறான பாரபட்சமான அணுகுமுறையால் தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். இதிலிருந்து நிவர்த்தி காண வேண் டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் வழி யாக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ள னர். 

இதில், சிஐடியு மாவட்டத் தலைவர்  எஸ்.சுப்ரமணியன், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் வி. பாண்டியன், பொருளாளர் ரவிச்சந்தி ரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நலவாரிய பதிவு ஆணை வழங்கல்

நாமக்கல், டிச. 9- விசைத்தறி தொழிலாளர்களுக்கு நலவாரிய பதிவு ஆணைகள் வழங்கப்பட்டது. திருச்செங்கோடு பகுதியில் விசைத்தறி தொழிலில் ஏரா ளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பணி  புரியும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் பல் வேறு நலத்திட்டங்கள் அடங்கிய,  நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளிகளான ஜீ. தங்கராஜ், கைலாசம்பாளையம் பகுதி எட்டிமடை புதூர் எஸ்.கணேசன், நாமக்கல் ரோடு பகுதியில் வசிக்கும் சதாசிவம்  ஆகிய மூன்று நபர்களுக்கு நலவாரிய பென்ஷன் ஆணையை  ஆண்டிப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் ஆதிநாரா யணன் வழங்குகினார்.

இந்த நிகழ்வின் போது  நாமக்கல் மாவட்டம் விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.அசோகன், பகுதி செயலாளர் முருகேசன் , எஸ்.செல்வராஜ், நல்ல சிவம் போன்ற தோழர்கள் கலந்து கொண்ட னர்.

மாற்றுத்திறனாளியை தாக்கிய கவுன்சிலர்?

சேலம், டிச. 9- மாற்றுத்திறனாளி பெண்ணை எட்டி  உதைத்து பெண் கவுன்சிலர் அடாவடியில்  ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்ட வர் சேலம் ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தார்.

இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்துள் ளதாவது, சேலம் மாவட்டம் பனமரத்துப் பட்டி ஒன்றியம் நல்லியம்புதூர் பகுதியை  சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி லட் சுமி, குழந்தைகள் வினிஷா ( 18 ) மிதுன். இதில்  வினிஷா மாற்றுத்திறனாளியாக உள்ளார். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஆறாவது வார்டு  கவுன்சிலர் பழனியம்மாள் மற்றும் அவரது கணவர் குஞ்சு என்கிற மாது ஆகியோர் லட் சுமிக்கு சொந்தமான நிலத்தில் கழிவுநீர் குழாய் அமைக்க வந்துள்ளனர்.

 இதனை எதிர்த்து கேள்வி கேட்டதால், லட்சுமி மற்றும் அவரது மாற்றுத்திறனாளி பெண் குழந்தை வினிஷா ஆகியோரை கண்ணத்தால் அறைந்து உள்ளார். இதனால்  அதிர்ச்சியடைந்த நாங்கள் நவம்பர் 27 ஆம்  தேதி பனமரத்துப்பட்டி காவல் நிலையத் தில் புகார் அளித்தோம். ஆனால், புகாரை  பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது வரை வழக்கு பதிவு செய்யவில்லை. மேலும்,  கவுன்சிலர் தரப்பினர் அடிக்கவில்லை நீங்கள்  தான் அவர்களை அடித்து உள்ளீர்கள் எனவும்  அவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் பேசுகின்றனர். கவுன்சிலர் கழிவு நீர் குழாய் அமைக்க பயன்படுத்தும் இடம் தங்கள் பூர்வீக நிலம்  எனவும் இதனை தட்டிக் கேட்ட குற்றத்திற் காக எங்களை அவதூறாக பேசி அடித்து உதைத்துள்ளனர். இது சம்பந்தமாக புகார் அளித்தும் வழக்குப்பதியாமல் உள்ள பன மரத்துப்பட்டி காவல்துறையினர் மற்றும் அடித்து துன்புறுத்திய பனமரத்துப்பட்டி ஆறாவது வார்டு கவுன்சிலர் பழனியம்மாள் மற்றும் அவரது கணவர் மாது ஆகியோர் மீது உரிய நடவடிக்கை மாவட்ட ஆட்சி யர் எடுக்க வேண்டும் என அதில் தெரிவித் துள்ளனர்.

பேருந்துகளில் பிளாஸ்டிக் கொண்டு வரத் தடை

 உதகை, டிச.9- நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை  பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட் டுள்ள நிலையில், சமவெளிப் பகுதியில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்துகளில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர அரசு போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.

அடந்த வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தின் சூழலியலை பாதுகாக்கும் நோக்கத்தோடு, பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட் களுக்கு நீலகிரி மாவட்டத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் அண்மைக்காலமாக தமிழ் நாடு அரசு பேருந்துகளில் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருவ தாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்து நர்கள் தங்களது பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் நீலகிரி மாவட்டத்தில் தமிழக  அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வராத வண்ணம் கண்காணித்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பேருந்துகளில் தணிக்கை  செய்யும் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.