districts

img

தமுஎகச பேரவைக் கூட்டம்

கோவை ஜன. 27- கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சிங்கை கிளைப் பேரவை மற்றும் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா கோத்தாரி  மில் பாதையில் உள்ள தியாகி முத்து நிலையத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு சிங்கை கிளைப் பொருளாளர் ஜூட்  பிஜூ தலைமை வகித்தார். கிளைத் தலைவர் டி.சுரேஷ்கு மார் வரவேற்றார். கவிஞர் நிலா கதிரவன்,  திரைப்பட தயா ரிப்பாளர் சவிதா சண்முகம், இலக்கிய வினாடி பேராசிரியர் சின்னசாமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் தி.மணி, மாவட்டச் செயலாளர் அ.கரீம்,  மாநிலக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.  பேரவையில் கிளைத் தலைவராக அருள்மணி, செயலா ளராக காளிநாதன், பொருளாளராக பிஜூ உள்ளிட்ட நிர்வாகக்  குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்வின் முடி வில் மாவட்டப் பொருளாளர் அருள்மணி நன்றி கூறினார்.