சேலம், பிப்.24- தில்லி ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் பெரியார், காரல் மார்க்ஸ் படங்களை வைத்திருந்த தமிழ்நாட்டு மாண வர்களை தாக்கி படங்களை சேதப்படுத்திய ஏபிவிபி அமைப் பினரை கண்டித்து சேலம் அரசு இருபாலர் கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் கருத்து உரிமையை நிலைநாட்ட பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்ட தலைவர் அருண் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாணவர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரம்யா, மாவட்ட குழு உறுப்பினர் கோகுல், மாவட்ட துணை செயலாளர் டார்வின் உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவி கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.