திருப்பூர், அக். 25 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தின் புதிய கிளை திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள திருக்குமரன் நகர் பகுதியில் கடந்த ஞாயிறன்று இந்த கிளை அமைக்கப்பட்டது கிளைக்கூட்டத்தில் தலைவர் பெருமாள், செயலாளர் உமா, பொருளாளர் கலைவாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். 30 பேர் உறுப்பினராக சேர்ந்தனர். சங்க மாவட்ட செய லாளர் பா.ராஜேஷ், மாவட்ட துணை செயலாளர் ரோஸி ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் நோக்கம், செயல்பா டுகள் பற்றி எடுத்துக் கூறினர். மாற்றுத்திறனாளிகள் அனைவ ருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.