districts

img

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “கனவுகள் மலரட்டும்” ஆறாவது மலர் கண்காட்சி

கோவை, பிப்.6- தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தில் வருகின்ற பிப்.23 ஆம் தேதியன்று,”கனவுகள் மல ரட்டும்“ என்ற மையக்கருத்துடன் ஆறாவது  மலர் கண்காட்சி நடை பெற உள்ளது. இதுகுறித்து வேளாண்மை  பல்கலைக்கழகம் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது, தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகம் சார்பில் மலர்களின் வண்ணங்களையும், அழகினையும், அதன் வணிக முக் கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் கோவை மக்களின் பார் வைக்காக மலர் கண்காட்சி 6 ஆவது முறையாக நடத்தப்பட உள்ளது. இத்தகைய பெருமை மிக்க நிகழ்வு 11 ஆண்டுகள் கழித்து  வரும் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது. கடந்த 2012ல்  நடைபெற்ற மலர் கண்காட்சியினை சுமார் 2 இலட்சம் மக்கள் பார் வையிட்டனர். இந்த முறை 3 லட்சம்  மக்கள் பார்வையிடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.  இந்த மாபெரும்  மலர் கண்காட்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரோட்டரி கிளப் கோயம்புத் தூருடன் இணைந்து நடத்துகிறது. மல்லிகை, செண்டுமல்லி, சம் பங்கி, கனகாம்பரம், தாமரை, செவ் வந்தி, ஆஸ்டர், பெட்டூனியா உள் ளிட்ட ஏராளமான மலர்களை கொண்டு கலைநயத்துடன் பல் வேறு உருவ அமைப்புகளாக அலங்கரிக்கப்பட உள்ளன. மலர் கண்காட்சியின் முக்கியத்துவம் இயற்கைவள பாதுகாப்பு,  சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை பேணல், மலர்களின் முக்கியத் துவம் மற்றும் வணிக மதிப்பு ஆகி யவற்றை பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்து செல்வதே இக்கண்காட்சியின் நோக்கமாகும். 2005, 2006, 2010,  2011 மற்றும் 2012 ஆகிய வருடங் களில் பல்வேறு மையக்கருத்து ருவுடன் நடந்தேறிய மலர் கண் காட்சிகள், மக்களிடம் நல்ல வர வேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, வரும் 6வது மலர் கண் காட்சியும் அத்தகைய வண்ணம்  அமையும் பொருட்டு ‘கனவுகள்  மலரட்டும்’என்ற மையக்கருத் துடன் நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியின் சிறப்பம்சங்கள் நமது நாட்டில் உற்பத்தி செய்யும் கொய்மலர் மற்றும் உதிரி மலர்களைக் கொண்டும், அரியவகை வெளிநாட்டு மலர் களான பேங்க்ஸியா, ஆர்னமென் டல் பிராசிகா, ஹைபெரிக்கம், பியோனி, கொச்சியா, புரோடியா, லியாட்ரிஸ் மற்றும் அழகு பைன் ஆப்பிள்களைக் கொண்டும், உள் ளூரில் உற்பத்தியாகும் பல்வேறு  உருவ அமைப்புகள் அமைக்கப் பட உள்ளன. அதுமட்டுமின்றி,  தோட்டக்கலை சார்பு நிறுவனங் ்கள், வேளாண்மை சார்ந்த தொழில் நிறுவனங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் சித்த மருத்துவ துறைகள்  இக்கண்காட்சியில் கலந்து கொண்டு பொருட்காட்சி அரங்கு கள் அமைக்கப்படவுள்ளது குறிப் பிடத்தக்கது. மேலும் அலங்கார மலர் கலையை ஊக்குவிக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு சிறந்த அலங்கார மலர் கலையை காட்சிப்படுத்தும் போட்டியும் நடத் தப்பட உள்ளது என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.