உலக தாய்மொழி தினம் மற்றும் தமிழ் ஆட்சி மொழிச்சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கியது. இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அ.புவனேஸ்வரி உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் திரளானோர் பங்கேற்றனர்.