districts

img

நீலகிரி மாவட்டம் முழுவதும் கள ஆய்வு

உதகை, அக்.21- தலித் மக்களின் வாழ்நிலை குறித்து நீலகிரி மாவட்டம் முழுவ தும் கள ஆய்வு மேற்கொண்டு தலை யீடு செய்வது என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நீலகிரி மாவட்ட பேர வையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நீலகிரி மாவட்ட பேரவை கூட்டம் உதகையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் எல். சங்கரலிங்கம் தலைமை தாங்கி னார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் செல்லக் கண்ணு பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார்.  இதில், தலித் மக்களின் மீதான வன்கொடுமை தாக்குதல்கள், பஞ் சமி நிலங்கள் அபகரிப்பு உள்ளிட்ட வைகள் குறித்து நீலகிரி மாவட்டம் முழுவதும் கள ஆய்வு நடத்துவது. மேலும், இதனையொட்டி தலித்  மக்களின் உரிமைக்கான போராட் டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து பேரவை யில், நீலகிரி மாவட்ட தலைவராக கண்ணன், செயலாளராக இளம் பரிதி, பொருளாளராக சுந்தர்ராஜ்  உட்பட 13 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் உரையாற்றினார்.