districts

img

பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப ஒப்படைப்பு

நாமக்கல், ஏப்.6- நாமக்கல் மாவட்டத்தில், பறக்கும் படையினரால் பறி முதல் செய்யப்பட்ட ரூ.2.46 கோடி ரொக்கம் உரிய வர்களிடம் திரும்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுவினர் பல் வேறு இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொண்டு உரிய  ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம், நகை,  மதுபானங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கருவூ லத்தில் ஒப்படைத்து வருகின்றனர். அந்த வகையில், நாமக் கல் மாவட்ட எல்லைகளான எம்.மேட்டுப்பட்டி, பவித்தி ரம் புதூர், மல்லூர், பரமத்தி வேலூர், வாங்கல் சாலை,  திம்மநாய்க்கன்பட்டி, கொக்கராயன்பேட்டை, பள்ளிபா ளையம் காவிரி ஆற்றுப்பாலம், குமாரபாளையம் காவிரி ஆற்றுப்பாலம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு,  24 மணி நேரம் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகி றது. இதுவரை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற பறக்கும்  படை வாகன சோதனையில், ரூ.2,98,64,085 ரொக்கம் கைப் பற்றப்பட்டு, அதில் ரூ.2,46,59,695 தொகை விடுவிக்கப் பட்டுள்ளது. அதேபோல, ரூ.30,42,77,557 மதிப்பிலான பரிசுப்  பொருட்கள், பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டு, ரூ.21,59,00,671 மதிப்பிலானவை விடுவிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச. உமா வெள்ளியன்று மாவட்ட எல்லையான திம்மநாய்க்கன் பட்டி சோதனைச்சாவடியில் கார், வேன், சரக்கு வாகனங் களை மடக்கி சோதனையிட்டார். இந்த ஆய்வின்போது, காவல் துறையினர், துணை ராணுவத்தினரும் உடனி ருந்தனர்.