சேலம், பிப்.16- மேச்சேரி அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மேசைகள் வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,327 மாணவர்கள் படித்து வரு கின்றனர். இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொழில திபர்கள் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் 200 மேசைகள் (பென்ஞ், டெஸ்க்) பள்ளிக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் டி. எம்.செல்வகணபதி, நன்கொடை வழங்கிய வர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சகுந்தலா, மேச்சேரி ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாச பெரு மாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.