districts

நீலகிரியில் கூடுதலாக கோடை மழைப்பொழிவு

உதகை, ஜூன் 1- நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு 224 மில்லிமீட்டர் கூடுதலாக கோடை மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை  வடகிழக்கு பருவமழையும் பெய்யும்.  இதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்யும். நீலகிரி மாவட் டத்தை பொருத்தவரை தென்மேற்கு பருவமழை தான் அதிக அளவில் பெய் யும். இந்நிலையில், நீலகிரி மாவட்டத் தில் நடப்பாண்டு வழக்கத்தைவிட கோடை மழையும், பருவமழைக்கு நிக ராக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தேயிலை காய்கறி சாகுபடி கள் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. கோடை மழை அளவு குறித்து இந் திய மண் மற்றும் பாதுகாப்பு நிறுவன முதன்மை விஞ்ஞானியும் தலைவரு மான கண்ணன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை சராசரியாக 200 மில்லி மற்றும் வடகிழக்கு பருவமழை சராசரியாக 300 மில்லி மீட்டரும் கோடைமழை 230  மில்லி மீட்டரும் பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் 454  மில்லி மீட்டர் கோடை மழை பெய்துள் ளது. இதன் மூலம் 224 மில்லிமீட்டர் அதி கமாக பதிவாகியுள்ளது. இதிலும் குறிப்பாக மே மாதத்தில் மட்டும் 268 மில்லி மீட்டர் மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை முடிந்து விட்டது. அடுத்த ஒரு  சில நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.