districts

img

10 ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை

நெல்லை அருகே 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 9.30 மணியளவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. நெல்லை மாவட்டம் சேந்திமங்கலம் அருகே அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த மாணவர் சுரேந்தர் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் விரக்தியடைந்த மாணவர் சுரேந்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


;