ஈரோடு, பிப்.18- ஈரோடு மாவட்டத்தில் உள்ள பஞ்சாலையில் அடைத்து வைத்து வேலை வாங்கப்பட்ட சிறுமியின் கை விரல்கள் பணியிட விபத்தில் இழந்த நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல், பேசி தீர்த்துக்கொள்ள சொல்லிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, அம்மையன் புரத்தைச் சேர்ந்த ரெங்கசாமி மகள் ராஜேஸ்வரி (19). இவரது பெற் றோர் வயோதிகம் காரணமாக வீட்டில் உள்ளனர். இவரது அண்ணன் அப்பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். ராஜேஷ்வரி 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், தாண்டாம்பாளையத்திலுள்ள செல்வக்குமார் ஸ்பின்னர்ஸ் பி.லிட் என்ற பஞ்சாலைக்கு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக அங்கு வேலை செய்துவரும் முருகேசன் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு ராஜேஸ்வரியின் ஊருக்குச் சென்று அழைத்துள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக 14 வயது நிரம்பிய ராஜேஸ்வரி உள்ளிட்ட 5 சிறுமிகள் வேலைக்கு சேர்ந் துள்ளனர். இவர்கள் தங்க வைக் கப்பட்ட விடுதியில் இவரைப் போன்றே மேலும் 50 பெண்களும், சிறுமிகளும் இருந்துள்ளனர். அங் குள்ள உணவு விடுதியில் உணவு அளிக்கப்பட்டது. ராஜேஸ்வரிக்கு புளூ ரூம் எனப் படும் பிரிவிலிருந்து பஞ்சை திரட்டி கார்டிங் மெசினுக்குள் விடும் வேலையை கொடுத்தனர். இதற் கென எந்த பயிற்சியும் அளிக்கப் படவில்லை. அத்துடன் பாதுகாப்பு உபகரணங்களும் அளிக்கப்பட வில்லை. தங்குமிடம், உணவு இல வசம் மற்றும் தினமும் ரூ.500 கூலி கொடுப்பதாக அழைத்து வரப்பட் டவர்களுக்கு ரூ.290 மட்டுமே வழங் கப்பட்டது. மேலும் பண்டிகை, அரசு விடுமுறை நாட்கள் உள்ளிட்ட எந்த விடுமுறையும் இவர்களுக்கு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி இரவு நேர பணிக்கு ராஜேஸ்வரி அழைக்கப்பட்டுள் ளார். இரவு 10 மணிக்கு சென்றவரை புளூரூம் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டும் என மேற்பார் வையாளர் வற்புறுத்தியுள்ளார். அதன்படி வேலை செய்து வந்த நிலையில் மறுநாள் பணி முடிய 10 நிமிடங்களுக்கு முன்பாக கார்டிங் மிசின் பழுதடைந்தது. அது தெரியா மல் கை வைத்த ராஜேஷ்வரியின் கை உள்ளிழுக்கப்பட்டது. கையை எடுக்க முடியாமல் சத்தம் போட்ட தால் மேற்பார்வையாளர் ஓடி வந்து இயந்திரத்தை ரிவர்சில் இயக்கி கையை வெளியே எடுத்தார். அப் போது கட்டை விரலைத் தவிர மற்ற நான்கு விரல்களும் நசுங்கி கூலாக் கப்பட்டு ரத்தம் வலிந்தது. ஆலையில் முதலுதவிக்கான எந்த ஏற்பாடும் இல்லாத நிலை யில் வாகனத்தின் மூலம், முத்தூர் ராஜமோகன் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கிருந்து ஈரோடு கவின் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நான்கு விரல்களும் அகற்றப் பட்டது. மூன்று நாள் கழித்து மருத்து வமனைக்கு வந்த ஆலை உரிமை யாளர் மருத்துவ செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். எதிர்கால வாழ்க்கைக்காக இழப்பீடாக ஒரு பெரிய தொகையும், தொடர்ந்து ஆலையில் வேறு வேலையும் தரு கிறேன். எனவே, காவல் துறையில் புகார் எதுவும் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதேபோல மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறைக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. ஆனால், ஆலை நிர்வாகம் உறுதியளித்தபடி எந்த உதவியும் செய்யவில்லை. மருத்துவ செலவிற்கு சேமிப்பு மற்றும் நகைகளை விற்றும், கடன் வாங்கியும் செலவழித்து 14ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி கூறுகை யில், ஆலை நிர்வாகத்தை தொலை பேசி மூலம் தொடர்பு கொண்ட போது பலனில்லை. வலியுடன், சிகிச்சையைத் தொடர வேண்டிய நிலையில் இருக்கிறேன். சிவகிரி காவல் நிலையம் சென்று புகார் செய்தேன். ஆனால் காவல் துறை யினர் புகாரினைப் பெற்றுக் கொண்டதோடு, எந்த ரசீதும் தர வில்லை. பேசித்தீர்த்துக் கொள் ளுங்கள் என ராஜேஸ்வரி மற்றும் அவருடன் வந்தவர்களை திருப்பி அனுப்பி விட்டனர் என்றார் சோக மாக.
-சக்திவேல், ஈரோடு