சேலம், நவ.6- வடகிழக்கு பருவமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பெய்து மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தொடர் மழையால் ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். மாவட்டத்தில் ஞாயிறன்று காலையும் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. தம்மம்பட்டி, மேட்டூர், கடை யாம்பட்டி, ஏற்காடு, சங்ககிரி, ஆத்தூர், வீரகனூர், கரிய கோவில், ஆனைமடுவு ஆகிய பகுதிகளில் சனியன்று மழை பெய்தது. தொடர் மழையினால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- வீரகனூர் - 23, சங்ககிரி - 16.3, ஏற்காடு - 12.6, ஆத்தூர்-9, ஆனைமடுவு - 9, கரிய கோவில் - 5, பெத்தநாயக்கன் பாளையம் - 5, செங்கவல்லி - 5, மேட்டூர் -4.4, தம்மம்பட்டி - 4, எடப்பாடி - 3, கடை யாம்பட்டி - 3, சேலம்- 2.4 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 101.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.