மேட்டுப்பாளையம், ஆக.2- பவானிசாகர் அணையின் நீர் மட்ட உயரம் அதிகரித்து வருவ தால், காந்தையாறு உயர்மட்டப் பாலம் தற்போது நீருக்கடியில் மூழ் கிய நிலையில், பொதுமக்கள் மீண் டும் பரிசல்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அருகே உள்ள சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட மலையடி வார கிராமங்களான லிங்காபுரம் மற்றும் காந்தவயல் இடையே காந் தையாறு என்னும் காட்டாறு பாய்கி றது. இந்த ஆற்றின் குறுக்கே ரூ.40 லட்சம் செலவில், கடந்த 2005 ஆம் ஆண்டு இருபதடி உயரத்தில் பாலம் கட்டப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் கட்டப்பட்ட இப்பாலம் மழைக் கால நீர்வரத்தை சரியாக கணக்கி டாமல் கட்டப்பட்டதால் ஆரம்பம் முதலே சிக்கல் உருவானது. மழைக்காலத்தில் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பவா னிசாகர் அணையின் நீர்மட்ட உய ரம் 90 அடியை எட்டும் போதே, அதன் நீர்தேக்கப் பகுதியில் ஆற் றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலம் மெல்ல மெல்ல தண்ணீரில் மூழ்க துவங்கி விடும். அணையின் நீர்மட்ட உயரம் நூறு அடியை கடந்து விட்டால் (தற்போது பவா னிசாகர் அணையின் நீர்மட்டம் 93 அடி), இந்த உயர்மட்ட பாலம் முழு வதுமாக நீருக்குள் மூழ்கி விடுவ தோடு இதன் இணைப்பு சாலைக ளும், தண்ணீருக்கடியில் சென்று விடும். இதனால், ஆற்றின் அக்கரை யில் உள்ள காந்தையூர், உளியூர், ஆளூர், காந்தவயல் கிராமங்கள் நீர் சூழ்ந்த தீவாகி போகும். நகரப் பகுதிகளுக்கு சென்று வரும் போக் குவரத்திற்கு இப்பாலத்தை மட் டுமே நம்பியிருந்த பொதுமக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். விவசாய விளைப் பொருட் களை கொண்டு செல்வது, மருத்து வம், உள்ளிட்ட அனைத்திற்கும் ஆபத்தான முறையில் பரிசல்கள் மூலமே ஆற்றை கடக்கும் சூழல் உருவாகும். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வெள்ளப்பெருக்கு காலத்தில் நீருக்கடியில் மூழ்காத கூடுதல் உயரத்துடன் புதிய பாலம் கட்டத்தர அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, ரூ.14 கோடி செலவில் புதிய உயர் மட்டப்பாலம் கட்ட அனுமதியளிக் கப்பட்டு, பணிகளும் கடந்தாண்டு துவங்கியது. இந்நிலையில், கடந்த இரு வார காலத்திற்கு மேலாக மேற் குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழையால் பவானி ஆறு மற்றும் அதில் இணை யும் கிளை காட்டாறுகளான காந் தையாறு, மாயாறு போன்றவற்றில் நீர்வரத்து அதிகரித்து பவானிசா கர் அணையின் நீர்மட்ட உயரம் அதிகரித்து வருவதால், தற்போது மீண்டும் இப்பாலம் நீருக்கடியில் மூழ்கி வருகிறது. இதனால் காட் டாற்றை கடந்து செல்ல மீண்டும் பரி சல்களையே இப்பகுதி பொதுமக் கள் பயன்படுத்த துவங்கியுள்ள னர். இந்நிலையில், சிறுமுகை பேரூ ராட்சி சார்பில் தனியார் மோட்டார் படகு ஒன்றும் கொண்டு வரப்பட்டு தற்போது சோதனைக்காக இயக் கப்பட்டு வருகிறது. விவசாயத்தை வாழ்வாதார மாக கொண்டுள்ள இக்கிராமங்க ளில் இருந்து வாழை, கரும்பு, சோளம் போன்ற விவசாய விளைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்வதிலும் பள்ளி, கல் லூரி செல்லும் மாணவர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வரு கின்றனர். இதுகுறித்து சிறுமுகை பேரூராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, பொதுமக்கள் ஆற்றை கடக்க பாது காப்பான மோட்டார் படகுகள் ஏற் பாடு செய்யப்பட்டு வருகிறது. புதிய பாலப்பணிகள் தண்ணீர் வடிய துவங்கியதும் விரைவுப்படுத்தப்ப டும், என தெரிவிக்கப்பட்டது.