districts

img

விபத்துகளை தடுப்பது குறித்து ஆய்வு

நாமக்கல், ஜூன் 27- நாமக்கல் நகராட்சிப் பகுதியில் சாலை விபத்து களைத் தடுப்பது தொடர்பாக, அதிகாரிகள் குழுவினர் புதனன்று ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய  சந்திப்புகளில், சாலைகளில் விபத்துகள் நிகழ்கின்றன. இதனைத்தடுக்கும் பொருட்டு நெடுஞ்சாலைத் துறை,  வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், போக்குவ ரத்துக் காவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதனன்று நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட சேலம் சாலை, பரமத்தி சாலை, திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை களில், விபத்து அடிக்கடி நிகழும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, முருகன் கோவில்  பேருந்து நிறுத்தம், பொன்நகர், மணிக்கூண்டு, பரமத்தி  சாலையில் பெரியப்பட்டி பிரிவு பகுதிகளில் சாலை களை அகலப்படுத்தவும், வாகனங்கள் வேகத்தைக் குறைக்க இரும்புத் தடுப்புகள் (பேரிகாட்) அமைக்க வும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் ஒப்பு தலுக்குப் பிறகு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.