திருப்பூர், பிப்.29- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலைப்பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரி வித்ததாவது, திருப்பூர் மாவட்டத்தில் சாலைப்பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும், பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தி, விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலைகள் துறை யின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வண்ணம் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். முன்னதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபி ஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், சார் ஆட்சியர் சௌம்யா ஆனந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, மாநகர துணை காவல் ஆணையர்கள் ராஜராஜன், வனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (பொது) விஜயராஜ், வருவாய் கோட்டாட்சி யர்கள் செந்தில் அரசுன் (தாராபுரம்), ஜஸ்வந்த் கண்ணன் (உடுமலைப்பேட்டை) மற்றும் வட்டார போக்குவரத்து அலுவ லர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.