பள்ளிபாளையம், மே 3- தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் 7 தங்கம் வென்ற பள்ளிபாளையம் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய உட்புற தற்காப்பு கலை விளையாட்டு போட்டிகள் தில்லி டாக்கோரா ஸ்டேடியத்தில், ஏப்ரல் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடை பெற்றது. தேசியளவில் நடை பெற்ற போட்டியில், தமிழ்நாடு அணிக்காக தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் சென்சாய்.கு.பாலகிருஷ்ணன் தலை மையில், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த 30 மாணவ மாணவி யர் கொண்ட குழுவினர் போட்டியில் பங்கேற்றனர். 19 மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பங்கேற்ற இப் போட்டியில், பள்ளிபாளையத்தை சேர்ந்த மாணவர்கள் 7 தங்கப்பதக்கம், 6 வெள்ளி பதக்கம், 14 வெண்கல பதக்கங் களை மாணவர்கள் குவித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளிபாளையம் பேருந்து நிலை யத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ஏராளமா னோர் பங்கேற்று வீரர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்த னர்.