districts

img

மருத்துவக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டதால் மாணவர்கள் மறியல்

திருப்பூர், ஏப். 25 - அங்கீகாரம் இல்லாத மருத்துவக்  கல்வி என்று மாவட்ட சுகாதாரப் பணி கள் இணை இயக்குநரால் சீல் வைக் கப்பட்ட மருத்துவக்கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சாலை  மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் செல்லும் வழியில் ஓலப்பாளையம் பகுதியில் செல்வநாயகி என்ற பெயரில் தனி யார் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை செயல்பட்டு வந்தது. இங்கு எலக்ட்ரோபதி என்ற பெய ரில் மருத்துவ முறை குறித்து மருத்து வக் கல்வியும், அத்துடன் மருத்துவம னையும் செயல்பட்டு வந்தது. ஆனால், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் மற்றும் அலுவலர்கள் அந்த மருத்துவக்கல் லூரியில் ஆய்வு மேற்கொண்டு, எலக்ட்ரோபதி மருத்துவ முறை அங் கீகரிக்கப்பட்ட முறை அல்ல; இது  போலி மருத்துவ முறை என்று சொல்லி இந்த மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இங்கு 40 மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். அவர்களிடமும் இந்த மருத்துவம் போலி மருத்துவ முறை, இங்கு பட்டம் பெறுவது செல் லாது போலி மருத்துவர் என்று அரசு அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், செவ்வாயன்று ஓலப்பாளையம் தனியார் மருத்துவக்  கல்லூரியை சேர்ந்த மாணவ மாண விகள் வெள்ளகோவில் - முத்தூர்  சாலையில் அமர்ந்து மறியலில் ஈடு பட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கூறுகையில், எலக்ட்ரோ  பதி மருத்துவ முறை குறித்து பல் வேறு நீதிமன்ற வழக்குகள் நடத் தப்பட்டு இந்த முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாங் கள் காட்டிய ஆவணங்களை எவ்வித  பரிசீலனையும் செய்யாமல் இது  போலி மருத்துவம் இந்த மருத்துவ மனை போலி மருத்துவமனை என்று சொல்லி சுகாதாரத் துறையினர் சீல்  வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாது.  உடனடியாக இந்த மருத்துவம னைக்கு சீல் வைத்ததை நீக்க வேண் டும்; மீண்டும் செயல்பட அனுமதிக்க  வேண்டும் என்று வலியுறுத்தினார். மறியலில் ஈடுபட்டவர்கள் எலக்ட் ரோபதி முறைக்கு நீதி வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி இருந்த னர். இந்த மறியல் சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சிய ரகத்துக்குச் சென்று மாவட்ட ஆட்சிய ரிடம் இதுகுறித்து முறையிட்டு தீர்வு  காணும் படி காவல்துறையினர் தெரி வித்தனர். இந்தப் பேச்சுவார்த் தையை தொடர்ந்து அந்த மருத்து வக் கல்லூரியை சேர்ந்தவர்கள் மறி யல் போராட்டத்தை நிறுத்திவிட்டு திருப்பூருக்கு புறப்பட்டு சென்றனர்.